NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்டில் கனமழை: கேதார்நாத் நடைபயணம் செல்லும் பாதையில் பாறைகள் மோதியதில் 3 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்டில் கனமழை: கேதார்நாத் நடைபயணம் செல்லும் பாதையில் பாறைகள் மோதியதில் 3 பேர் பலி 

    உத்தரகாண்டில் கனமழை: கேதார்நாத் நடைபயணம் செல்லும் பாதையில் பாறைகள் மோதியதில் 3 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 21, 2024
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலையேற்றப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

    இச்சம்பவம் இன்று கவுரி குண்ட் அருகே நடந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து முதல்வர் உத்தரகாண்ட் புஷ்கர் சிங் தாமி வருத்தம் தெரிவித்ததோடு, அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    "கேதார்நாத் யாத்ரா வழித்தடத்தில் மலையில் இருந்து விழுந்த கனரக கற்கள் காரணமாக சில யாத்ரீகர்கள் காயமடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. விபத்து நடந்த இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. நான் தொடர்ந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். " என்று தாமி கூறியுள்ளார்

    உத்தரகாண்ட் 

    கனமழையால் தொடரும் நிலச்சரிவுகள் 

    "விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிறந்த சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.அவர்களது ஆன்மாக்களுக்கு தனது காலடியில் இடம் தந்து இந்த துயரத்தை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்குவானாக" என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இடைவிடாத மழையைத் தொடர்ந்து, ஜூலை 19 அன்று, தனக்பூர் சம்பவத் தேசிய நெடுஞ்சாலை, நிலச்சரிவால் தடைபட்டது.

    அதற்கு முன்னதாக ஜூலை 10ஆம் தேதி, பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் படால் கங்கா லாங்சி சுரங்கப்பாதை அருகே மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை தடைப்பட்டது.

    மேலும், ஜோஷிமத் அருகே பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்

    சமீபத்திய

    ஆன்லைன் பேட்டிங் செயலிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு; மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஆன்லைன் கேமிங்
    தாமதமாகிறது 'Avengers: Doomsday' வெளியீடு; எப்போது தெரியுமா? ஹாலிவுட்
    டர்புலன்ஸின் போது வான்வெளியைப் பயன்படுத்த இண்டிகோ விமானியின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது இண்டிகோ
    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

    உத்தரகாண்ட்

    உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 120 மணி நேரத்தை கடந்து தொடரும் மீட்பு குழுவின் போராட்டம் உடல் நலம்
    7வது நாளாக தொடரும் உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப் பணி: சிக்கியுள்ள 41 தொழிலாளர்ளுக்கு என்ன ஆகும்? விபத்து
    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 பேரை மீட்க இன்னும் 4-5 நாட்கள் ஆகும் என்று தகவல் மத்திய அரசு
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் 41 பேரை மீட்க 5 அடக்கு திட்டம் அறிமுகம்  விபத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025