NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
    இந்தியா

    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

    எழுதியவர் Nivetha P
    April 05, 2023 | 05:34 pm 1 நிமிட வாசிப்பு
    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

    தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல்.,5) கேள்வி நேரத்தின் பொழுது சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், சிவகங்கை மிகுந்த வறட்சியான மாவட்டமாக உள்ளது. நிலத்தடி நீர் தான் இங்குள்ள விவசாயிகளுக்கு நீர் ஆதாரம். இதனால் தற்போது 18 மணிநேர மின்சாரம் என்பதை 24 மணிநேர மின்சாரமாக மாற்றி விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதே போல் விவசாயம் செய்யும் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியவர்களுக்கு அருகில் உள்ள நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்காக அவர்கள் கட்டணம் கட்ட தயாராக உள்ளார்கள். இது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.

    இதர கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - அமைச்சர்

    இவருக்கு பதிலளிக்கும் விதமாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், விவசாயிகளுக்கு 24 மணிநேர மின்சாரம் என்பது முதல்வரின் உத்தரவாக உள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மின் பகிர்மானத்திற்கான கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. பணி முடிந்ததும் மும்முனை மின்சாரம் வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார். மேலும் தற்போது சிவகங்கை மாவட்டத்திற்கு 3,232 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதர கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    சிவகங்கை
    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி சட்டமன்றம்
    இந்தியாவின் 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திகழும் திருப்பூர் திருப்பூர்
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு சென்னை

    சிவகங்கை

    கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை 6ம் தேதி துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
    சிவகங்கை கீழடி அருங்காட்சியகத்தில் என்னென்ன இருக்கிறது என ஓர் பார்வை தமிழ்நாடு
    கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா? கோலிவுட்
    எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை  காங்கிரஸ்

    மாவட்ட செய்திகள்

    கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு தமிழ்நாடு
    தருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் போக்குவரத்து காவல்துறை
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023