NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது எஸ்பிஐ
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது எஸ்பிஐ

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது எஸ்பிஐ

    எழுதியவர் Sindhuja SM
    Mar 13, 2024
    01:39 pm

    செய்தி முன்னோட்டம்

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) இன்று பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

    கடந்த மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.

    இந்த பத்திரங்களை வழங்குவதை நிறுத்தவும், இந்த முறையில் அளிக்கப்பட்ட நன்கொடைகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6 ஆம் தேதிக்குள் தெரிவிக்கவும் அப்போது எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதால் இந்த சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

    ஆனால், இந்த விவரங்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கி, கூடுதல் அவகாசம் கோரி இருந்தது.

    இந்தியா

    பிராமண பத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் 

    இந்நிலையில், எஸ்பிஐயின் இந்த கோரிக்கையை இரண்டு நாட்களுக்கு முன் விசாரித்த உச்ச நீதிமன்றம், "அந்த விவரங்களை நாளைக்குள்(மார்ச் 12) இந்திய தேர்தல் ஆணையத்திடம்(இசிஐ) பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்று உத்தரவிட்டது.

    அதோடு சேர்த்து பிராமண பத்திரத்தையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க, நேற்று மாலை தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த எஸ்பிஐ, இன்று அதற்கான பிராமண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

    தேர்தல் ஆணையத்திடம் ஒரு பென்டிரைவில் தரவுகளை சமர்ப்பித்துள்ளதாக எஸ்பிஐ தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.

    இரண்டு PDF கோப்புகளில் உள்ள அந்த தரவுகள், கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறியுள்ளது.

    இந்தியா 

    தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்த விவரங்கள் 

    உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு, ஏப்ரல் 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும் வங்கி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளது.

    அதில், 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் எடுத்துக்கொண்டன என்றும், மீதமுள்ள 187 பத்திரங்கள் மீட்கப்பட்டு, விதிகளின்படி பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்பட்டது என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழ், நன்கொடையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க பத்திரங்களை வாங்கலாம்.

    ஆனால் அரசியல் கட்சிகள் 15 நாட்களுக்குள் அந்த பத்திரங்களை மீட்டெடுக்க வேண்டும், இல்லையெனில் அந்தத் தொகை பிரதமரின் நிவாரண நிதிக்கு செல்லும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எஸ்பிஐ
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    எஸ்பிஐ

    எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் ரிலையன்ஸ்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்க கால அவகாசம் கோரியது எஸ்பிஐ  உச்ச நீதிமன்றம்
    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்  டெல்லி

    உச்ச நீதிமன்றம்

    'உண்மை வென்றது': செபி விசாரணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து கௌதம் அதானி பேச்சு  அதானி
    பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் அமெரிக்கா
    அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை - உச்சநீதிமன்றம்  செந்தில் பாலாஜி
    பில்கிஸ் பானோ வழக்கு: பலாத்கார குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி அளித்த குஜராத் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் குஜராத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025