NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் உருவெடுக்கும் 20 மாடி குடியிருப்பு கட்டிடங்கள் 
    சென்னையில் உருவெடுக்கும் 20 மாடி குடியிருப்பு கட்டிடங்கள் 
    இந்தியா

    சென்னையில் உருவெடுக்கும் 20 மாடி குடியிருப்பு கட்டிடங்கள் 

    எழுதியவர் Nivetha P
    May 04, 2023 | 11:00 am 0 நிமிட வாசிப்பு
    சென்னையில் உருவெடுக்கும் 20 மாடி குடியிருப்பு கட்டிடங்கள் 
    சென்னையில் உருவெடுக்கும் 20 மாடி குடியிருப்பு கட்டிடங்கள்

    தமிழ்நாடு மாநிலத்தில், சென்னையில் காலிமனைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான நிறுவனங்கள் 20 தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள். சென்னையில் கடந்த 1959ம்ஆண்டில் கட்டப்பட்ட 14 தளங்கள் கொண்ட எல்.ஐ.சி.அலுவலகமே உயரமான கட்டிடம் என இருந்து வந்த நிலையில் 2008ம் ஆண்டு கட்டுமான திட்டங்களில் உயர வரையறையானது தளர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்தே சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், சென்னைக்கு வெளியில் பழைய மாமல்லபுரம் சாலையில் ஏகாட்டூர் உள்ளிட்ட இடங்களில் அதிக உயரம் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறுகையில், அப்பாசாமி ரியல் எஸ்டேட் சார்பில் சென்னையின் எல்லையான கொட்டிவாக்கத்தில் 636 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது என்று கூறினர்.

    விமானநிலையம் ஒட்டிய பகுதிகளில் கட்டுமான திட்டங்களுக்கு உயரக்கட்டுப்பாடு

    மேலும் அவர்கள், கட்டப்படுவதில் 2 கட்டிடங்கள் 20 தளங்கள் கொண்டது. ஒரு கட்டிடம் 39 மாடிகள் வரை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் கொட்டிவாக்கத்தில் 198 வீடுகள் கொண்ட 21 அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படவுள்ளது. மேலும் கிண்டி ராஜ்பவன் அருகில் 20 மாடி கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்காக கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்திடம் 5.56ஏக்கர் நிலத்தினை ரூ.360கோடிக்கு இந்நிறுவனம் வாங்கியுள்ளது என்று கூறியுள்ளனர். விமானநிலையத்தின் ஆணையம் தடையின்மை சான்று கொடுத்தால் இப்பகுதியில் அடுக்குமாடு கட்டிடம் கட்டுவதில் சிக்கல்வராது. ஏனெனில் விமானநிலையம் ஒட்டிய பகுதிகளில் கட்டுமான திட்டங்களுக்கு உயரக்கட்டுப்பாடு உள்ளது என்று நகரமைப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர். சென்னை நகர எல்லைக்குள் எல்.ஐ.சி.க்கு அடுத்தபடியாக கோயம்பேட்டில் ஹரியந்த் டவர்ஸ் 1999ம்ஆண்டு 17 தளங்கள் கொண்டு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    தமிழ்நாடு

    சென்னை

    டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இயங்கவில்லை - செந்தில் பாலாஜி  தமிழக அரசு
    ஐபிஎல் டிக்கெட் வாங்க முடியவில்லை என சாலை மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்  தங்கம் வெள்ளி விலை
    கோடை விடுமுறையை கழிக்க, சென்னையை சுற்றி உள்ள கடற்கரைகளுக்கு விசிட் அடிக்கலாமா? கடற்கரை

    தமிழ்நாடு

    சித்திரை திருவிழா தேரோட்டத்தில் இனிப்பு வழங்கிய இஸ்லாமியர் - மத நல்லிக்கணம்! திருப்பூர்
    வேலூரில் வானில் தோன்றிய வெண்புகை வட்டம் - வியப்புடன் பார்வையிட்ட மக்கள்  விமானம்
    இயக்குனரும், நடிகருமான மனோபாலா கடைசியாக பகிர்ந்த புகைப்படம் வைரல்  வைரல் செய்தி
    எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை - G-Square நிறுவனம்  வருமான வரி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023