NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதால் மகள்களை இழந்ததாக 2 இந்திய குடும்பங்கள் சீரம் இன்ஸ்டிடியூட் மீது வழக்கு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதால் மகள்களை இழந்ததாக 2 இந்திய குடும்பங்கள் சீரம் இன்ஸ்டிடியூட் மீது வழக்கு
    அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், தங்கள் தடுப்பூசி அரிதான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்

    கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதால் மகள்களை இழந்ததாக 2 இந்திய குடும்பங்கள் சீரம் இன்ஸ்டிடியூட் மீது வழக்கு

    எழுதியவர் Venkatalakshmi V
    May 02, 2024
    10:25 am

    செய்தி முன்னோட்டம்

    கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு இறந்ததாகக் கூறப்படும் இரண்டு இந்தியப் பெண்களின் பெற்றோர்கள், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.

    இந்த தடுப்பூசியை உருவாக்கிய அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், தங்கள் தடுப்பூசி அரிதான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று UK நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.

    அஸ்ட்ராஜெனெகாவின் இந்த வாக்குமூலத்தினால், தங்கள் மகள்களின் மரணத்திற்காக நீதி கிடைக்கும் என்று அந்த பெற்றோர்கள் நம்புகிறார்கள்.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த கோவிட்-19 தடுப்பூசியானது TTS - த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறி அரிதாக உண்டாக்கும் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

    கோவிஷீல்டு மரணம்

    கோவிஷீல்டு தடுப்பூசியால் மரணமடைந்த மகள்கள்

    18 வயதான ரித்தாயிகா ஸ்ரீ ஓம்ட்ரி, 2021 இல் கோவிஷீல்டின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டார். ஆனால், தடுப்பூசி செலுத்திய 7 நாட்களுக்குள், ரித்தாய்காவுக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டு, வாந்தி எடுக்கத் தொடங்கினார்.

    அதன் பின்னர் அவரால் நடக்க முடியவில்லை.

    தொடர்ந்து MRI ஸ்கேன் எடுக்கப்பட்டது. அது அவரது மூளையில் பல இரத்தக் கட்டிகள் மற்றும் இரத்தப்போக்கு இருப்பதைக் காட்டியது.

    இரண்டு வாரங்களில், ரித்தாயிகா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    ரித்தாய்காவின் இறப்புக்கான சரியான காரணம் அப்போது ரிதாய்காவின் பெற்றோருக்குத் தெரியவில்லை.

    ஆனால் இரண்டு ஆர்டிஐகள் பின்னர், டிசம்பரில், மத்திய சுகாதார அமைச்சகம் ரித்தாய்கா "த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசிட்டோபீனியா சிண்ட்ரோம்" நோயால் பாதிக்கப்பட்டு "தடுப்பூசி காரணமாக இறந்துவிட்டாள்" என்பதை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு விளக்கம் கிடைத்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவிட் தடுப்பூசி
    கோவிட்
    கோவிட் 19

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    கோவிட் தடுப்பூசி

    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொரோனா
    பூஸ்டர் டோஸாக 'கோவோவாக்ஸ்' தடுப்பூசிக்கு 15 நாட்களில் அனுமதி - சீரம் இந்தியா நிறுவனம் தகவல் இந்தியா
    உண்மை தகவல் சரிபார்ப்பு: கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள பக்க விளைவுகள் பற்றிய வதந்தியும் கோவிட் 19
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கோவிட்

    சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியா கவலைப்படத் தேவையில்லை  இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 224 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 3 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 288 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா

    கோவிட் 19

    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 267 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 174 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 124 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025