NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம்
    புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம்
    இந்தியா

    புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம்

    எழுதியவர் Nivetha P
    February 24, 2023 | 04:47 pm 0 நிமிட வாசிப்பு
    புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம்
    புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம்

    புதுச்சேரி லாஸ்பேட்டையில் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரியில் புதிய விமானநிலைய வளாகம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டவுடன் விமான சேவைகளும் துவங்கியது. புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு விமானசேவை துவங்கப்பட்ட நிலையில் பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக அந்த விமான சேவைகள் 2014ம்ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து மீண்டும் 2015ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல் விமான சேவைகள் துவங்கப்பட்டது. இதுவும் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் அதே வருடம் அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மத்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டமான உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையடுத்து புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்திற்கும், பெங்களூருவுக்கும் விமானங்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் உதான் திட்டம்

    இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் விரைவில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கான மாதிரி சிறிய ரக விமானம் புதுச்சேரி வந்த நிலையில், பேரவை தலைவர் செல்வம், அமைச்சர் தேனி விஜயகுமார் உள்ளிட்டோர் அவ்விமானத்தை ஆய்வு செய்தனர். இது குறித்து சிறு விமான சேவையை துவங்கும் தனியார் நிறுவன சிஇஓ சதீஷ்குமார் பேசுகையில், மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் 19 இருக்கைகள் கொண்ட விமான சேவையினை சிறிய நகரங்களை இணைக்க துவங்கவுள்ளோம். அதனை காட்சிப்படுத்தவே புதுச்சேரிக்கு எடுத்து வந்தோம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து இந்த விமானத்தை செக் குடியரசில் வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    புதுச்சேரி
    விமான சேவைகள்
    உதான்

    புதுச்சேரி

    வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21 தமிழ்நாடு
    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை போக்குவரத்து காவல்துறை
    புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை காவல்துறை
    புதுச்சேரியிலும் தமிழகத்தை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் தமிழ்நாடு

    விமான சேவைகள்

    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன? விமானம்
    ஏரோ இந்தியா 2023; விமான கண்காட்சியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி! விமானம்
    விமானிகள் பயிற்சியில் தவறிழைத்ததால் ஏர் ஏசியாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் இந்தியா

    உதான்

    மோடி கூறிய 5-Tக்கு பதில் 5-c தான் ஆட்சியில் நடக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023