NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லக்னோ: வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போதே, 14 வயது மாணவன் மாரடைப்பால் மரணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    லக்னோ: வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போதே, 14 வயது மாணவன் மாரடைப்பால் மரணம்
    14 வயது மாணவன் மாரடைப்பால் மரணம்

    லக்னோ: வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போதே, 14 வயது மாணவன் மாரடைப்பால் மரணம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 22, 2023
    05:20 pm

    செய்தி முன்னோட்டம்

    லக்னோவின் அலிகஞ்சில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில், 9 ஆம் வகுப்பு படிக்கும் அதிஃப் சித்திக் என்ற மாணவன் கடந்த புதன்கிழமை தனது வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தான்.

    இந்த செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது.

    புதன்கிழமை அன்று, பள்ளியில் வேதியியல் வகுப்பின்போது, சித்திக் தனியாகப் படித்துக் கொண்டிருந்தான். அவன் அருகிலேயே ஆசிரியர் நதீம் கான் மற்றொரு மாணவருக்கு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொண்டிருந்துள்ளார்.

    அப்போது சித்திக் திடீரென சுருண்டு விழுந்ததையடுத்து மாணவர்கள் அலறியடித்தனர்.

    ஆசிரியர் கான், சித்திக்கிற்கு முதலுதவி செய்து, CPR செய்யவும் முயற்சித்துள்ளார். ஆனால் பலனளிக்கவில்லை.

    இதனையடுத்து, ஆசிரியரும், பள்ளி செவிலியரும் சித்திக்கை அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    card 2

    இந்தியர்களை அதிகம் தாக்கும் இதய நோய்

    ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த மாத தொடக்கத்தில் தான், சித்திக், தனது 14வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் என்பது மேலும் ஒரு சோகமான விஷயம்.

    பிரேத பரிசோதனை அறிக்கை மூலமே சித்திக் மரணத்திற்கான சரியான காரணம் கண்டறியப்படும் என்று அந்த மருத்துவமனையின் இருதயவியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் தெரிவித்தார்.

    இறந்து போன மாணவன் சித்திக்கிற்கு ,அயன் என்ற இரட்டை சகோதரர் மற்றும் அரீபா மற்றும் அருஷா என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

    உலகிலுள்ள மற்ற மக்களை விட, 5-10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்களை இதய நோய்கள் தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளி மாணவர்கள்
    மாரடைப்பு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பள்ளி மாணவர்கள்

    2023-24ம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கான முக்கியத்துவம் பட்ஜெட் 2023
    பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் சட்டமன்றம்
    சென்னைக்கான பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு மாலை ஸ்நாக்ஸ் திட்டம் சென்னை
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு

    மாரடைப்பு

    குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பைத் தடுக்க 4 வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆரோக்கிய குறிப்புகள்
    இளம் வயதினரை அதிகமாக பாதிக்கும் மாரடைப்பு பற்றி நிபுணர் கருத்து மன அழுத்தம்
    ஜிம்மில் உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து பலியான போலீஸ் கான்ஸ்டபிள் - அதிர்ச்சி வீடியோ தெலுங்கானா
    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம் ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025