NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரபிரதேசத்தில் 91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத 10ம் வகுப்பு மாணவி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரபிரதேசத்தில் 91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத 10ம் வகுப்பு மாணவி 
    உத்தரபிரதேசத்தில் 91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத 10ம் வகுப்பு மாணவி

    உத்தரபிரதேசத்தில் 91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத 10ம் வகுப்பு மாணவி 

    எழுதியவர் Nivetha P
    Apr 27, 2023
    07:49 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 10 மற்றும் 12ம்வகுப்பு வாரிய தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது.

    அதில், அமேதி நகரிலுள்ள பாதர் பகுதியினை சேர்ந்த பாவனா வர்மா என்னும் மாணவியும் ஒருவராவார்.

    அவர் எழுதிய 10ம்வகுப்பு தேர்வில் 91.43%மதிப்பெண் எடுத்துள்ள நிலையிலும் அவர் தேர்ச்சி பெறவில்லை என்னும் வினோதத்தகவல் ஒன்று பரவலாக பரவியது.

    இதுகுறித்து ஆராய்ந்தப்பொழுது, உத்தரப்பிரதேச வாரியத்தின் அலட்சிய போக்கால் செய்முறை தேர்வு அனைத்திலும் இவர் வெறும் 3 மதிப்பெண்களே பெற்றுள்ளார் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    அந்த மாணவி 70 மதிப்பெண்களுக்கான எழுத்து தேர்வில் இந்தியில் 65 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 67 மதிப்பெண்களும், சமஸ்கிருதத்தில் 66 மதிப்பெண்களும், அறிவியலில் 52 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

    மாணவி

    தேர்ச்சி பெற முடியவில்லை என்னும் வேதனையில் மாணவி 

    அதன்படி மொத்தம் 420 மதிப்பெண்களுக்கு 384 மதிப்பெண்களை அந்த மாணவி பெற்றுள்ளார். இதனால் அவரது தேர்ச்சி விகிதம் 91.43%ஆக உள்ளது.

    இது குறித்து பாவனா கூறுகையில், செய்முறை தேர்ச்சியில் 30க்கு 30 என மதிப்பெண்கள் அனைத்து பாடங்களுக்கும் பள்ளியிலிருந்து வழங்கப்பட்டு விட்டது.

    ஆனால் மதிப்பெண் சான்றிதழில் ஒவ்வொரு பாடத்திலும் 3 மதிப்பெண்களே பெற்றுள்ளேன்.

    இதனால் தேர்ச்சி பெற முடியாமல் போனது பெரும் வேதனையினை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

    பாவனா ஒருவேளை செய்முறை பயிற்சி தேர்வில் மொத்தம் 18 மதிப்பெண்களுக்கு பதிலாக 180 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் அவருக்கு 600 மதிப்பெண்களுக்கு 564 மதிப்பெண்கள் அதாவது 94% கிடைத்து இருக்கும்.

    அவர் மாவட்ட பட்டியலில் டாப் 10 வரிசையில் வந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உத்தரப்பிரதேசம்

    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் இந்தியா
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் இந்தியா
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா

    இந்தியா

    பேருந்துகளில் மாற்று திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது! போக்குவரத்துறை அதிரடி  போக்குவரத்து விதிகள்
    வீடியோ பார்க்கையில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பரிதாப பலி!  கேரளா
    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா இலங்கை
    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு  சூடான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025