NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர்
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 08, 2023
    07:42 pm
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர்
    10 இந்தியர்கள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்

    துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பணிக்காகத் துருக்கிக்கு சென்ற இந்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் இன்று(பிப் 8) தெரிவித்துள்ளது. 10 இந்தியர்கள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் சிக்கிக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தற்போது துருக்கியில் 3,000 இந்தியர்கள் இருக்கின்றனர் என்றும் வெளியுறவுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. "துருக்கியின் அதானாவில் நாங்கள் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளோம். 10 இந்தியர்கள் பாதிக்கப்பட்ட இடங்களின் தொலைதூர பகுதிகளில் சிக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். வணிக பயணத்திற்கு வந்த இந்தியர் ஒருவரைக் காணவில்லை. நாங்கள் அவரது குடும்பத்தினருடனும் பெங்களூரில் இருக்கும் அவரது நிறுவனத்துடனும் தொடர்பில் இருக்கிறோம்." என்று மேற்கு செயலாளர் சஞ்சய் வர்மா தெரிவித்திருக்கிறார்.

    2/2

    இந்தியாவின் ஆபரேஷன் தோஸ்த்தின் மூலம் உதவி

    இந்தியா, சிரியாவிற்கு தேவையான மீட்பு பொருட்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வருவதாகவும், துருக்கிக்கு 'ஆபரேஷன் தோஸ்த்' திட்டத்தின் கீழ் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பி உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் 11,000க்கும் மேற்பட்ட மக்களை இடிபாடுகளுக்குள் தேடும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த நாடுகளுக்கு பல உலக நாடுகளில் இருந்து உதவிகள் வரத் தொடங்கியுள்ளன. "#OperationDostன் கீழ், மீட்புக் குழுக்கள், கள மருத்துவமனை(மருந்துகள் நிறைந்த பெட்டி), மருந்துகள் மற்றும் உபகரணங்களை துருக்கிக்கும் சிரியாவுக்கும் இந்தியா அனுப்பி வருகிறது." என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மீட்பு பணிகளில் உதவ இந்த படைகள் அனுப்பப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    துருக்கி
    சிரியா
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    இந்தியா
    வெளியுறவுத்துறை

    துருக்கி

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் சிரியா
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    வாக்காளர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் துருக்கிய ஜனாதிபதி துருக்கி-சிரியா நிலநடுக்கம்

    சிரியா

    துருக்கி பூகம்ப இடிபாடுகளில் இருந்து 128 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்ட குழந்தை துருக்கி
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்

    இந்திய ராணுவ வீரருக்கு அன்பாக முத்தம் கொடுத்து நன்றி தெரிவிக்கும் துருக்கிய பெண் துருக்கி
    துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு இடையே பிறந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டது துருக்கி
    இந்தியர்கள் அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த இந்தியாவிற்கான துருக்கிய தூதர் துருக்கி
    துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய் துருக்கி

    இந்தியா

    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை பிரதமர் மோடி
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் மும்பை
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்

    வெளியுறவுத்துறை

    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா
    கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023