NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு: மா.சுப்பிரமணியம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு: மா.சுப்பிரமணியம் 
    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு - மா.சுப்பிரமணியம்

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு: மா.சுப்பிரமணியம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 20, 2023
    02:08 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று(அக்.,19) உலக விபத்து தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

    அதில் கலந்துக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் உரையாற்றியுள்ளார்.

    அவர் பேசியதாவது, "டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு கடந்த ஜனவரியிலிருந்து இப்போதுவரை 5,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 531 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 1000-1500 வரையிலான மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது' என்றும் கூறினார்.

    தொடர்ந்து அவர். 'இன்னுயிர் காப்போம்' திட்டம் மூலம் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் பாதியாக குறைந்துள்ளது என்றும் கூறியதாக தெரிகிறது.

    டெங்கு 

    'திருப்தி' என்னும் உதவி திட்டத்தினை துவக்கி வைத்தார் 

    மேலும், 'உலக விபத்து தினத்தினை அனுசரிக்கும் விதமாக சென்னை முதலுதவி பயிற்சிகள் சட்டக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது' என்றும்,

    'அக்.,11ம் தேதி முதல் அக்.,31ம் தேதி வரை மார்பக புற்றுநோய் விழிப்புணவர்வு ஏற்படுத்தும் வகையில் 40வயதுக்கு மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள், பெண்கள் மற்றும் செவிலியர்களுக்கு பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது' என்றும் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து அவர், ராஜஸ்தான் இளைஞர் அமைப்பு சார்பில் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளிகளோடு தங்கியிருக்கும் 500 பேருக்கு தினமும் மதியம் உணவு வழங்கும் 'திருப்தி' திட்டத்தினை துவக்கி வைத்து, விரைவில் இதன் எண்ணிக்கை 2000-ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மருத்துவக் கல்லூரி
    சென்னை
    புற்றுநோய்
    விபத்து

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    மருத்துவக் கல்லூரி

    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா
    மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு கேரளா
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு
    லஞ்சம் பெற்ற விவகாரம்: தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம் தேனி

    சென்னை

    உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சென்னை வந்தனர்  இந்தியா
    சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது  கைது
    பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோ- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் கலைஞர் கருணாநிதி
    போராட்டத்தை வாபஸ் பெற்ற பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்  பள்ளிக்கல்வித்துறை

    புற்றுநோய்

    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக உடல் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ உடல் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் உடல் ஆரோக்கியம்
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா டென்னிஸ்

    விபத்து

    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யா
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025