NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள்; விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள்; விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம்
    மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள்

    மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள்; விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 10, 2023
    04:36 pm

    செய்தி முன்னோட்டம்

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

    திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விண்ணப்பங்களை வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 24ஆம் தேதி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து விண்ணப்ப பதிவை இரண்டு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்ட அரசு, முதற்கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை 20,765 ரேஷன் கடைகளில் முகாமை நடத்தியது.

    இந்த முகாமில் இருந்து மொத்தம் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    special camp for missed women

    இரண்டாம் கட்ட முகாமில் 59.86 லட்சம் விண்ணப்பங்கள்

    முதற்கட்ட முகாமிற்கு பிறகு, இரண்டாம் கட்டமாக எஞ்சியுள்ள பகுதிகளில் 05.08.2023 அன்று தொடங்கி 16.08.2023 வரை விண்ணப்ப முகாம்கள் நடந்து வருகிறது.

    இதில் தற்போதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் காலம் இருப்பதால் கூடுதல் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, இரண்டு முகாம்களிலும் இதுவரை வந்துள்ள விண்ணப்பங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க நேரடி கள ஆய்வை தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

    கள ஆய்வின் மூலம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களை மட்டும் தேர்வு செய்து மகளிர் உரிமைத் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.08.2023 மற்றும் 20.08.2023 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    மு.க.ஸ்டாலின்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழக அரசு

    தமிழ்நாட்டில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு விற்கப்படும் தக்காளி தமிழ்நாடு
    இனி வாரந்தோறும் பொதுமக்களை சந்திக்க வேண்டும்: காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவு காவல்துறை
    ஷிவ் தாஸ் மீனா தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக நியமனம்; யார் அவர்? தமிழ்நாடு
    உடலநலம் பாதிக்கப்பட்ட கட்டுமானத்தொழிலாளர்களுக்கு உதவி தொகை: தமிழக அரசு அறிவிப்பு  தமிழ்நாடு

    மு.க.ஸ்டாலின்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    ராமேஸ்வரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்-காணொளி காட்சி மூலம் துவக்கி வைப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025