Page Loader
யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்.,30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு 
யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்.,30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்.,30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு 

எழுதியவர் Nivetha P
Oct 16, 2023
05:56 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கடந்த மாதம் 17ம் தேதி சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலு செட்டி சத்திரம் என்னும் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் வீலிங் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரது விலையுயர்ந்த பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மீது பாலு செட்டி சத்திரம் காவல்துறையினர் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஜாமீன் 

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் டிடிஎஃப் வாசன்

இதனிடையே, டிடிஎஃப் வாசன் தரப்பில் ஏற்கனவே 2 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றோடு(அக்.,16) அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்த காரணத்தினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதி அவரது நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்களுக்கு அக்.,30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் இவரது நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிபதியின் உத்தரவினை தொடர்ந்து தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.