NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த காரணத்தை கூறிய பெண்; அதிர்ச்சி அடைந்த போலீசார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த காரணத்தை கூறிய பெண்; அதிர்ச்சி அடைந்த போலீசார்
    ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

    ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த காரணத்தை கூறிய பெண்; அதிர்ச்சி அடைந்த போலீசார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 29, 2023
    01:59 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்ற வாரத்தில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல கோடி மதிப்புள்ள நகைகளும், வெள்ளி சாமான்களும் கொள்ளை போன விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஐஸ்வர்யாவின் புகாரின் பேரில், விசாரணையை துவங்கிய போலீசார், அவரது வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி தான் கொள்ளை அடித்துள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.

    ஐஸ்வர்யாவின் டிரைவரான வெங்கடேசனுடன் இணைந்து ஈஸ்வரி, திருடிய நகைகளை விற்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

    அதை கொண்டு, ECR-ல் 1 கோடி ரூபாய்க்கு வீடு கட்டியுள்ளதாக தெரிகிறது.

    ஈஸ்வரியின் கணவர், சந்தேகப்பட்டு, அவரிடம், 'ஏது இவ்வளவு பணம்?' எனக்கேட்டதற்கு, ஈஸ்வரி, 'இது ஐஸ்வர்யா கட்டும் வீடு. இன்கம்டாக்ஸ் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக என் பெயரில் கட்ட சொல்லி உள்ளார். நான் அவரின் பினாமி போல' என கூறி சமாதானம் கூறியுள்ளார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

    போலீஸ் காவலில் ஈஸ்வரி

    ஈஸ்வரி வசம் இருந்த நகைகளை மீட்டபோது, 100 சவரன் நகைகள் கிடைத்துள்ளது. 100 சவரன் எங்கிருந்து வந்தது எனக்குழம்பிய போலீசார், இருவரையும் 2 நாள் காவலில் எடுத்துள்ளனர்.

    அப்போது விசாரணையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனக்கு கொடுக்கும் சம்பளம் போதாத காரணத்தால் தான் சின்ன சின்ன திருட்டுகளை செய்ய தொடங்கியதாகவும், அதை ஐஸ்வர்யா கண்டுபிடிக்கவில்லை என்றதும், நகைகளை திருட தொடங்கியதாக கூறியுள்ளார் ஈஸ்வரி.

    "சரி, உன் மாத சம்பளம் எவ்வளவு?" எனக்கேட்டதற்கு, "மாதம் 30,000 தான் சம்பளம்" எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ஈஸ்வரி.

    மேலும் திருடிய நகைகளை விற்று வீடு கட்டினால் அகப்பட்டு விடுவோம் என்று, லோன் வாங்கி காட்டியுள்ளார். தொடர்ந்து லோனையும், நகைகளை விற்று இரண்டே ஆண்டுகளில் அடைந்துள்ளார் இந்த பலே பெண்மணி

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக காவல்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்
    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல் மு.க ஸ்டாலின்
    வானிலை அறிக்கை: மார்ச் 23- மார்ச் 27 புதுச்சேரி
    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு இந்தியா

    தமிழக காவல்துறை

    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025