NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த காரணத்தை கூறிய பெண்; அதிர்ச்சி அடைந்த போலீசார்
    பொழுதுபோக்கு

    ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த காரணத்தை கூறிய பெண்; அதிர்ச்சி அடைந்த போலீசார்

    ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த காரணத்தை கூறிய பெண்; அதிர்ச்சி அடைந்த போலீசார்
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 29, 2023, 01:59 pm 1 நிமிட வாசிப்பு
    ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த காரணத்தை கூறிய பெண்; அதிர்ச்சி அடைந்த போலீசார்
    ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

    சென்ற வாரத்தில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல கோடி மதிப்புள்ள நகைகளும், வெள்ளி சாமான்களும் கொள்ளை போன விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யாவின் புகாரின் பேரில், விசாரணையை துவங்கிய போலீசார், அவரது வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி தான் கொள்ளை அடித்துள்ளார் என்பதை கண்டுபிடித்தனர். ஐஸ்வர்யாவின் டிரைவரான வெங்கடேசனுடன் இணைந்து ஈஸ்வரி, திருடிய நகைகளை விற்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. அதை கொண்டு, ECR-ல் 1 கோடி ரூபாய்க்கு வீடு கட்டியுள்ளதாக தெரிகிறது. ஈஸ்வரியின் கணவர், சந்தேகப்பட்டு, அவரிடம், 'ஏது இவ்வளவு பணம்?' எனக்கேட்டதற்கு, ஈஸ்வரி, 'இது ஐஸ்வர்யா கட்டும் வீடு. இன்கம்டாக்ஸ் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக என் பெயரில் கட்ட சொல்லி உள்ளார். நான் அவரின் பினாமி போல' என கூறி சமாதானம் கூறியுள்ளார்.

    போலீஸ் காவலில் ஈஸ்வரி

    ஈஸ்வரி வசம் இருந்த நகைகளை மீட்டபோது, 100 சவரன் நகைகள் கிடைத்துள்ளது. 100 சவரன் எங்கிருந்து வந்தது எனக்குழம்பிய போலீசார், இருவரையும் 2 நாள் காவலில் எடுத்துள்ளனர். அப்போது விசாரணையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனக்கு கொடுக்கும் சம்பளம் போதாத காரணத்தால் தான் சின்ன சின்ன திருட்டுகளை செய்ய தொடங்கியதாகவும், அதை ஐஸ்வர்யா கண்டுபிடிக்கவில்லை என்றதும், நகைகளை திருட தொடங்கியதாக கூறியுள்ளார் ஈஸ்வரி. "சரி, உன் மாத சம்பளம் எவ்வளவு?" எனக்கேட்டதற்கு, "மாதம் 30,000 தான் சம்பளம்" எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ஈஸ்வரி. மேலும் திருடிய நகைகளை விற்று வீடு கட்டினால் அகப்பட்டு விடுவோம் என்று, லோன் வாங்கி காட்டியுள்ளார். தொடர்ந்து லோனையும், நகைகளை விற்று இரண்டே ஆண்டுகளில் அடைந்துள்ளார் இந்த பலே பெண்மணி

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    தமிழக காவல்துறை

    தமிழ்நாடு

    காரைக்குடி திரையரங்கு கேன்டீனில் பப்ஸ் சாப்பிடும் பூனை - உணவு விற்பனைக்கு தடை திரையரங்குகள்
    சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி  போராட்டம்
    பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்  கோவை
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழகம்

    தமிழக காவல்துறை

    நடிகை விநோதினியிடம் இருந்து திருடப்பட்ட பணம் மீட்பு கோலிவுட்
    புதுவையில் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ஆப்ரேஷன் 'விடியல்' திட்டம்  புதுவை
    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - நிபந்தனைகள் விதிப்பு  தமிழ்நாடு
    விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு சம்பவம்: புதியதாக ஒரு ட்விஸ்ட் கோலிவுட்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023