Page Loader
ஆடை நிறுவனத்தை புதுப்பொலிவுடன் ரீலான்ச் செய்த விஜய் தேவரகொண்டா
பண்டைய மரபுகள், மதங்கள் மற்றும் புராணங்களில் முக்கியத்துவம் பெற்ற தாமரை, 'ரவுடி' நிறுவனத்தின் லோகமாக உள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கப்படுகிறது.

ஆடை நிறுவனத்தை புதுப்பொலிவுடன் ரீலான்ச் செய்த விஜய் தேவரகொண்டா

எழுதியவர் Srinath r
Nov 27, 2023
05:22 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, ரவுடி - ஸ்ட்ரீட் இந்தியன் கல்ச்சர் என்ற தனது ஆடை நிறுவனத்தை மீண்டும் ரீலான்ச் செய்துள்ளார். அவரது சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ மூலம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதில், அவரின் ஃபேஷன் நிறுவனத்திற்கான புத்தம் புதிய தத்துவம் மற்றும் பார்வையை அறிமுகப்படுத்தி இருந்தார். வீடியோவில், விஜய் தேவரகொண்டா, இந்தியாவின் வளமான பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தழுவி கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். முன்னோர்கள் ராஜாக்களாக இருந்ததாகவும், அந்நியர்கள் வந்து நம்மை கொள்ளையடித்து விட்டதாகவும், மேலும், உலக அரங்கில் இந்தியா தனது மரியாதையை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

Instagram அஞ்சல்

விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள வீடியோ