Page Loader
18 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில் இணையும் சூர்யா- ஜோதிகா
ஜோதிகா, திருமணத்திற்கு பின்னர் கம்-பேக் தந்த திரைப்படங்களில் கூட இருவரும் நடிக்கவில்லை

18 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில் இணையும் சூர்யா- ஜோதிகா

எழுதியவர் Venkatalakshmi V
Apr 18, 2024
06:12 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டின் என்றென்றும் காதல் ஜோடிகள் என்றால் அது சூர்யா-ஜோதிகா தான். இருவரும் திருமணத்திற்கு முன்னர் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் நடித்தனர். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை. ஜோதிகா, திருமணத்திற்கு பின்னர் கம்-பேக் தந்த திரைப்படங்களில் கூட இருவரும் நடிக்கவில்லை. இதற்கிடையே ஒரு தனியார் ஊடகத்திடம் அளித்த பேட்டியில், ஜோதிகா, நல்ல கதை அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இணையத்தில் வெளியான தகவல்படி, இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க முடிவெடுத்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளது, 'சில்லு கருப்பட்டி' படத்தை இயக்கிய ஹலிதா அல்லது 'பெங்களூரு டேஸ்' அஞ்சலி மேனன் ஆகியோரில் ஒருவர்.

embed

வெள்ளித்திரையில் இணையும் சூர்யா- ஜோதிகா

Suriya - Jo to act together soon.👌 Direction : Front Runners Halitha Shameem (Sillu Karupatti) or Anjali Menon (Banglore Days). - VP— Christopher Kanagaraj (@Chrissuccess) April 18, 2024