மும்பையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ODI போட்டியை ரசித்த ரஜினிகாந்த்
மும்பையில், தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. அதை நேரில் கண்டு ரசித்துளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் காலேவின் அழைப்பின் பேரில் நடிகர், முதல், ஒருநாள் போட்டியைப் பார்க்க ஒப்புக்கொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த் கடைசியாக 2011 உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை மும்பையில் நேரடியாகப் பார்த்தார். ஊடக செய்திகளின்படி, இன்று, தனி விமானம் மூலம் முமபைக்கு சென்ற ரஜினிகாந்தை, MCA தலைவர் வரவேற்றார். ரஜினிகாந்த் ஒரு கிரிக்கெட் பிரியர், ஆனால், அவரின் நேரமின்மை காரணமாகவும், பாதுகாப்பு காரணமாகவும், நேரடியாக போட்டிகளை மைதானத்திற்கு சென்று காண்பதை விரும்புவதில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.