NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார் கவிஞர் வைரமுத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார் கவிஞர் வைரமுத்து
    ஒவ்வொரு பிரபலங்களாக தங்களால் முடிந்த நிதியுதவியை செய்து வருகின்றனர்.

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார் கவிஞர் வைரமுத்து

    எழுதியவர் Sindhuja SM
    Dec 09, 2023
    05:28 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வார தொடக்கத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கிய மிக்ஜாம் புயலால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

    இதனை தொடர்ந்து, தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஒவ்வொரு பிரபலங்களாக தங்களால் முடிந்த நிதியுதவியை செய்து வருகின்றனர்.

    அந்த வரிசையில், சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சமீபத்தில் நிவாரண உதவிகளை கேபிஒய் பாலா வழங்கி வருகிறார்.

    நடிகர் சூரியா சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவியாக சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது.

    டொய்ஜ்வ்ல்

    கவிஞர் வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு 

    இந்நிலையில், தற்போது கவிஞர் வைரமுத்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார்.

    இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர்,

    "'தண்ணீர் தண்ணீர்

    எங்கணும் தண்ணீர்

    குடிக்கத்தான் இல்லை ஒருதுளி'

    எனும் ஆங்கிலக் கவிதை

    நினைவின் இடுக்கில் கசிகிறது

    வீட்டுக்குத் தண்ணீர் இல்லை

    என்பது சிறுதுயரம்

    வீட்டுக்குள்ளேயே தண்ணீர்

    என்பது பெருந்துயரம்

    விடியும் வடியும் என்று

    காத்திருந்த

    பெருமக்களின் துயரத்தில்

    பாதிக்கப்படாத நானும்

    பங்கேற்கிறேன்

    என் கடமையின் அடையாளமாக

    முதலமைச்சரின்

    பொது நிவாரண நிதிக்கு

    ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன்

    பொருள்கொண்டோர்

    அருள்கூர்க

    சக மனிதனின் துயரம்

    நம் துயரம்

    இடர் தொடராதிருக்க

    இனியொரு விதிசெய்வோம்;

    அதை எந்தநாளும் காப்போம்" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    வைரமுத்து

    சமீபத்திய

    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி

    சென்னை

    மிக்ஜாம் புயல் : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிப்பு விடுமுறை
    பல்வேறு பல்கலைகழகங்களின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு  அண்ணா பல்கலைக்கழகம்
    சென்னை செல்லும் ரயில்கள் ரத்து: உதவி எண்களை அறிவித்தது தெற்கு ரயில்வே  தெற்கு ரயில்வே
    மிக்ஜாம் புயலால் தத்தளிக்கும் சென்னை; சிஎஸ்கேவின் வெளிநாட்டு வீரர் உருக்கமான பதிவு சென்னை சூப்பர் கிங்ஸ்

    வைரமுத்து

    சின்மயி இப்போ வந்து புகார் அளிப்பது ஏன்? வெண்ணிற ஆடை நிர்மலா பேட்டி  சின்மயி
    முதல்வர் கருணாநிதிக்காக, வைரமுத்து எழுதிய பாடல் ஸ்டாலின்
    கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாளில், அவரின் வரிகளில் வெளியான சில முத்தான பாடல்கள் பிறந்தநாள் ஸ்பெஷல்
    ஐந்து ஆண்டு தடைக்கு பின், தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆன பாடகி சின்மயி பாடகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025