NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'பொண்ணுங்களுக்குன்னா தீட்டா, எந்த கடவுளும் சொல்லவில்லை'-ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பொண்ணுங்களுக்குன்னா தீட்டா, எந்த கடவுளும் சொல்லவில்லை'-ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி
    தீட்டு என்று எந்த கடவுளும் சொல்லவில்லை, ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி பேட்டி

    'பொண்ணுங்களுக்குன்னா தீட்டா, எந்த கடவுளும் சொல்லவில்லை'-ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி

    எழுதியவர் Nivetha P
    Jan 25, 2023
    02:42 pm

    செய்தி முன்னோட்டம்

    மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் தான் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.

    இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.

    இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தில் ராகுல் ரவீந்திரன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முன்னணி காதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைக்கிறார்.

    இந்நிலையில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (ஜன., 24) நடந்தது.

    அப்போது பத்திரிக்கையாளரிடம் ஐஸ்வர்யா ராஜேஷ், 'கடவுள் அனைவருக்கும் ஒன்று தான். ஆண்-பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு இல்லை. என் கோயிலுக்கு இவர்கள் வரலாம், இவர்கள் வரக்கூடாது, என்று எந்த கடவுளும் சொல்லவில்லை' என்று பகிரங்கமாக தனது கருத்துக்களை கூறினார்.

    ஆணாதிக்கம் இன்னமும் உள்ளது

    தீட்டு என்று எந்த கடவுளும் சொல்லவில்லை, ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு

    தொடர்ந்து பேசிய அவர், எந்த கடவுளும் இத பண்ணக்கூடாது, இத சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை.

    அப்படி எந்த கடவுளாவது கூறியிருந்தால் சொல்லுங்கள். எல்லாமே மனிதர்கள் உருவாக்கிய சட்டங்கள் தான்.

    பீரியட்ஸ் நேரத்தில் இதை செய்யக்கூடாது, கோவிலுக்கு வர கூடாது, தீட்டு என்று எந்த கடவுளும் சொல்லவில்லை.

    சபரிமலை மட்டுமல்ல, எந்த கோயிலிலும் எந்த கடவுளும் பக்தர்களுக்கு கட்டளை பிறப்பிக்கவில்லை.

    எனக்கு இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

    மேலும் பேசிய அவர், இப்பொழுதும் ஆணாதிக்கம் கிராமங்களில் இருக்க தான் செய்கிறது என்பது எனது கருத்து என்றும் கூறினார்.

    ஐஸ்வர்யா ராஜேஷ் சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்காதது குறித்து பேசியது தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ் திரைப்படம்

    திரைப்பட நடிகைகளை குறி வைத்து ட்ரோல் செய்பவர்களுக்கு, திவ்யா ஸ்பந்தனா பதிலடி சமந்தா ரூத் பிரபு
    ஜப்பானில் முத்து படத்தின் சாதனையை முறியடித்து வசூலில் புதிய சாதனை செய்த 'RRR' ரஜினிகாந்த்
    கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கு வந்துவிடுவார் மேக்கப் முடிய 5 மணிநேரம் ஆகும் - ரகுல் ப்ரீத் சிங் கமலஹாசன்
    2022 ஆம் ஆண்டில் மிகைப்படுத்தி மதிப்பிடப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025