Page Loader
நாக சைதன்யா-சோபிதா திருமணம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்: தகவல்கள்
இந்த ஜோடி, நிச்சயதார்த்தத்தை நடத்தியதன் மூலம் தங்கள் உறவை அதிகாரபூர்வமாக்கினர்

நாக சைதன்யா-சோபிதா திருமணம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்: தகவல்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 31, 2024
10:08 am

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் நாக சைதன்யாவுக்கும், ஷோபிதா துலிபாலாவுக்கும் சமீபத்தில் பாரம்பரிய முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. நீண்ட நாட்களாக ரகசியமாக காதலித்து வநத இந்த ஜோடி, நிச்சயதார்த்தத்தை நடத்தியதன் மூலம் தங்கள் உறவை அதிகாரபூர்வமாக்கினர். ஆகஸ்ட் மாத நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, இந்த ஜோடி டிசம்பர் திருமணத்திற்கு தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிகின்றன. டெக்கான் குரோனிக்கிளில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, நாக சைதன்யா மற்றும் ஷோபிதா இருவரும் டிசம்பர் முதல் வாரத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இவர்களது திருமண தேதி குறித்து உறுதி செய்யப்படாத நிலையில், திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

விவரங்கள்

மேலும் சில விவரங்கள்

இந்த மாத தொடக்கத்தில், சோபிதா தனது வீட்டில் தனது தாய் மற்றும் குடும்பத்தில் உள்ள பிற பெண்கள் முன்னிலையில் நடந்த பாரம்பரிய திருமணத்திற்கு முந்தைய விழாவான மஞ்சள் இடிக்கும் சடங்கினை நடத்தினார். அதன் புகைப்படங்களை அவர் பின்னர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதன் பின்னர், சமீபத்தில் நடைபெற்ற ANR (அக்கினேனி நாகேஸ்வர ராவ்) விருது வழங்கும் விழாவில், சோபிதாவை மூத்த நடிகரும் சாயின் தந்தையுமான நாகார்ஜுனா அவர்களின் மருமகளாக சிரஞ்சீவிக்கு அறிமுகப்படுத்தினார். திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் அவர்கள் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இதுதான்.