LOADING...
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்! கல்கி படத்தில் நடிக்க உலக நாயகனுக்கு இத்தனை கோடியா?
கல்கி 2898 ஏடி படைத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ஒரு நாளைக்கு ரூ.15 கோடி சம்பளம் என தகவல்

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்! கல்கி படத்தில் நடிக்க உலக நாயகனுக்கு இத்தனை கோடியா?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 09, 2026
01:49 pm

செய்தி முன்னோட்டம்

2024 இல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் சுப்ரீம் யாஸ்கின் என்ற கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்துப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் மற்றும் இயக்குனர் யுகி சேது சமீபத்தில் அளித்த பேட்டியில், கமல்ஹாசன் தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம்

ஒரு நாளைக்கு $2 மில்லியன் சம்பளம்?

யுகி சேது இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத்தை நேரில் சந்தித்தபோது நடந்த உரையாடலைத் பகிர்ந்துள்ளார். முதலில் கமல் 20 நாட்கள் கால்ஷீட்டிற்கு ₹150 கோடி (ஒரு நாளைக்கு $1 மில்லியன்) வாங்கியதாக யுகி சேது நினைத்துள்ளார். ஆனால் தயாரிப்பாளர் அஸ்வினி தத், கமல் வெறும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதன்படி பார்த்தால், கமல்ஹாசன் ஒரு நாளைக்கு 2 மில்லியன் டாலர் (சுமார் ₹15 - ₹17 கோடி) சம்பளமாகப் பெற்றுள்ளார் எனக் கூறினார்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன் - கமல்ஹாசன் சந்திப்பு

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கெராஃப்டார் படத்திற்கு பிறகு, அமிதாப் பச்சனும் கமல்ஹாசனும் கல்கி 2 படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அமிதாப் பச்சன், "சிறந்த கலைஞர் கமல்ஹாசனை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. நீண்ட காலத்திற்குப் பிறகு இணைந்து பணியாற்றுகிறோம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இரண்டாம் பாகம்

கல்கி 2898 ஏடி - இரண்டாம் பாகம்

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான இந்த அறிவியல் புனைகதை திரைப்படம், இந்து புராணங்களை அடிப்படையாகக் கொண்டது. பாக்ஸ் ஆபீஸில் ₹1,000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. முதல் பாகத்தின் இறுதியில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் வலுவாகக் காட்டப்பட்டதால், இரண்டாம் பாகத்தில் அவருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, சம்பள உயர்வு மற்றும் பணிநேரச் சிக்கல்கள் காரணமாக நடிகை தீபிகா படுகோன் இரண்டாம் பாகத்திலிருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement