Page Loader
வாழை படத்தை பார்த்து மாரி செல்வராஜை பாராட்டிய மு.க ஸ்டாலின்; நன்றி தெரிவித்த இயக்குனர்
மாரி செல்வராஜை பாராட்டிய மு.க ஸ்டாலின்

வாழை படத்தை பார்த்து மாரி செல்வராஜை பாராட்டிய மு.க ஸ்டாலின்; நன்றி தெரிவித்த இயக்குனர்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2024
01:13 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியுள்ள 'வாழை' திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. படம் வெளியானதிலிருந்து பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். அழுத்தமான திரைக்கதை மற்றும் இயக்கத்திற்காக மாரி செல்வராஜை புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் திரைப்படத்தை பாராட்டி, சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை திரைப்படத்தினை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்! பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!" எனத்தெரிவித்துள்ளார். "தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.

நன்றி

முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்

முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், "என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

முதல்வரின் பதிவு

ட்விட்டர் அஞ்சல்

மாரி செல்வராஜின் பதிவு