விஜய் சேதுபதியின் 'மகாராஜா' ஒரே நாளில் ரூ.4.50 கோடி வசூல்
விஜய் சேதுபதி மற்றும் அனுராக் காஷ்யப் நடித்துள்ள ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படமான 'மகாராஜா', பாக்ஸ் ஆபிஸில் வலுவான வசூலை செய்துள்ளது. நேற்று அறிமுகமான இப்படம் ஒரே நாளில் 4.50 கோடி ரூபாய் வசூலித்தது. 2024 ஆம் ஆண்டில் மூன்றே மூன்று தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமே இப்படி ஒரு பிரமாண்டம் ஆரம்பம் கிடைத்திருக்கிறது. இந்த படம் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மம்தா மோகன்தாஸ் மற்றும் அபிராமி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நித்திலன் சாமிநாதன் இயக்கிய, மகாராஜா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது.
'மகாராஜா' மூன்று நாட்களில் ரூ.20 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆனால் இப்படம் இந்தியா முழுவதும் வெளியிடப்படவில்லை. மேலும் இதற்கு இந்தி டப்பிங்கும் செய்யப்படவில்லை. எனவே, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே வெளியான இப்படம் ஒரே நாளில் 4.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழில் மட்டும்மல்லாமல், தெலுங்கு மொழியிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகாராஜா திரைப்படம் இந்த வார இறுதியில் நன்றாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மூன்று நாட்களில் ரூ.20 கோடி வசூலை தாண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தத் திரைப்படம் இரண்டாவது நாளில், கிட்டத்தட்ட ரூ.8 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.