LOADING...
வளைகுடா நாடுகளில் பார்டர் 2 ரிலீஸ் இல்லை! சன்னி தியோல் படத்திற்கு வந்த சோதனை... காரணம் இதுதான்!
பார்டர் 2 படத்திற்கு வளைகுடா நாடுகளில் தடை

வளைகுடா நாடுகளில் பார்டர் 2 ரிலீஸ் இல்லை! சன்னி தியோல் படத்திற்கு வந்த சோதனை... காரணம் இதுதான்!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 24, 2026
07:18 pm

செய்தி முன்னோட்டம்

சன்னி தியோல் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் 2 திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) உலகம் முழுவதும் வெளியானது. அனுராக் சிங் இயக்கியுள்ள இந்தப் படத்தில் வருண் தவான், தில்ஜித் தோசன்ஞ் மற்றும் அஹான் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியா மற்றும் பிற நாடுகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள இந்தப் படம், வளைகுடா நாடுகளில் மட்டும் வெளியாகவில்லை. 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கருதுவதால், ஆறு வளைகுடா நாடுகள் இந்தப் படத்தை வெளியிட அனுமதி மறுத்துள்ளன.

நாடுகள்

தடை செய்த நாடுகளின் பட்டியல்

பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் படத்தை தடை செய்துள்ளன. அதிகாரப்பூர்வமாக தடை என்று அறிவிக்கப்படாவிட்டாலும், பாகிஸ்தானை எதிர்மறையாகச் சித்தரிக்கும் படங்களை வெளியிடுவதில் இந்த நாடுகள் ஆர்வம் காட்டுவதில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ரன்வீர் சிங் நடிப்பில் டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் திரைப்படமும் இதே காரணத்திற்காக வளைகுடா நாடுகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் பாகிஸ்தானின் பயங்கரவாதக் குழுக்களைப் பற்றிய கதைக்களத்தைக் கொண்டிருந்தது. வளைகுடா நாடுகளில் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், துரந்தர் படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

Advertisement