NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'மறக்குமா நெஞ்சம்': ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு; ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரும் பணி துவக்கம்
    'மறக்குமா நெஞ்சம்': ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு; ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரும் பணி துவக்கம்
    பொழுதுபோக்கு

    'மறக்குமா நெஞ்சம்': ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு; ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரும் பணி துவக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    September 13, 2023 | 01:23 pm 1 நிமிட வாசிப்பு
    'மறக்குமா நெஞ்சம்': ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு; ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரும் பணி துவக்கம்
    'மறக்குமா நெஞ்சம்': ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு; ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரும் பணி துவக்கம்

    கடந்த ஞாயிற்றுகிழமை, சென்னை ECR-ல் அமைந்துள்ள ஒரு தனியார் திறந்தவெளி வளாகத்தில், ஏஆர் ரஹ்மான் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசைநிகழ்ச்சி, ஒருங்கிணைப்பாளர்கள்களின் அலட்சியபோக்கால், மோசமான விமர்சனங்கள் பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, ECR மற்றும் OMR ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பலநேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏஆர் ரஹ்மான், தான் யாரையும் குறைகூற விரும்பவில்லை எனவும், தானே இந்த அசௌகரியத்திற்கு பொறுப்பேற்பதாகவும் பதிவிட்டு, இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் டிக்கெட்டுகளை புகைப்படம் எடுத்து தன்னுடைய அணியின் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் கோரியிருந்தார். இந்நிலையில், பலரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் , இது பணம் பறிக்கும் ஒரு மோசடி எனவும் குற்றம்சாட்டினர்.

    ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு

    இதனை தொடர்ந்து ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் ஒரு வீடியோ பதிவு மூலம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில், "இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த அசௌகரியங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் காரணம் இல்லை அவர் குறித்து தவறாக பதிவிட வேண்டாம். செப்டம்பர் 10 ஆம் தேதி நடந்த மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் நிறைய அசௌகரியங்கள் நடந்துள்ளது அதை நாங்கள் மறுக்கவில்லை. நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டியது தான், ரகுமான் சாரின் பொறுப்பு அதை அவர் சிறப்பாக செய்தார். ஏ.ஆர்.ரகுமான் அவர் பணியை சிறப்பாக செய்தார் அவரைத் தாக்கி எந்த பதிவையும் பதிவிட வேண்டாம். கூட்ட நெரிசல், போலி டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தான் காரணம் அதற்கு மன்னிப்பு கேட்கிறோம்" என கூறியுள்ளார்.

    ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் 

    #Watch | "'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குளறுபடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தயவு செய்து ரஹ்மான் சாரை தாக்காதீங்க" - ACTC நிறுவனர் ஹேமந்த் #SunNews | #MarakkumaNenjam | @actcevents | @arrahman pic.twitter.com/CQPMllkqMa

    — Sun News (@sunnewstamil) September 13, 2023

    திருப்பி அனுப்பப்படும் டிக்கெட் பணம்

    ஏஆர் ரஹ்மான் உத்தரவாதம் அளித்தது போலவே, இன்று முதல், இசை நிகழ்ச்சியில் டிக்கெட் இருந்தும் பங்கேற்க இயலாதவர்களுக்கு கட்டணத்தை திருப்பி அளிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஈமெயில் மூலம் சுமார் 4000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என புகார் தெரிவித்திருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் நகலை சரி பார்த்து கட்டணத்தை திருப்பி அளித்து வருகின்றனர். தற்போது வரை 400 பேருக்கு டிக்கெட் பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

    400 பேருக்கு டிக்கெட் பணம் refund

    #BREAKING | இதுவரை 400 பேருக்கு பணத்தை திருப்பித்தந்த ஏ.ஆர்.ரஹ்மான்#ARRahmanConcert | #ARRConcert | #ARRahman | #MarakkumaNenjam | #actcevents pic.twitter.com/xI19uHdwqx

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 13, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஏஆர் ரஹ்மான்
    சென்னை

    ஏஆர் ரஹ்மான்

    ஏ.ஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சி எதிரொலி: இரண்டு காவலதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் தமிழக காவல்துறை
    மறக்குமா நெஞ்சம்: ஏஆர் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் கோலிவுட் பிரபலங்கள் கோலிவுட்
    தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரிகள்: ஒரு பார்வை  இசையமைப்பாளர்
    'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் வைரல் செய்தி

    சென்னை

    ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசைநிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் குமுறல்; நடந்தது என்ன? இசையமைப்பாளர்
    ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் - மா.சுப்பிரமணியம் மருத்துவ ஆராய்ச்சி
    சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல்
    'லியோ' படத்தின் அடுத்த அப்டேட் - புஸ்ஸி ஆனந்த்  விஜய்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023