Page Loader
விவாகரத்து குறித்த தவறான வதந்திகளுக்கு எதிராக நடவடிக்கை; ஏஆர் ரஹ்மான் வக்கீல் நோட்டீஸ்
விவாகரத்து குறித்து வதந்தி பரப்புவர்களுக்கு எதிராக ஏஆர் ரஹ்மான் எச்சரிக்கை

விவாகரத்து குறித்த தவறான வதந்திகளுக்கு எதிராக நடவடிக்கை; ஏஆர் ரஹ்மான் வக்கீல் நோட்டீஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 23, 2024
07:37 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்தது குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்களுக்கு சட்டரீதியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஹ்மானின் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த எச்சரிக்கை நோட்டீஸ், அவரையும் அவரது குடும்பத்தினரையும் குறிவைத்து பரப்பப்பட்ட அவதூறான உள்ளடக்கத்தை 24 மணி நேரத்திற்குள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கைக்கு இணங்கத் தவறினால், பாரதிய நியாய சன்ஹிதா, 2023 இன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, 1995 இல் திருமணம் செய்துகொண்ட ஏஆர் ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தனர். அவர்களுக்கு கதீஜா மற்றும் ரஹீமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

ஏஆர் ரஹ்மான் நோட்டீஸ்