NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஒரு வாரத்திற்குள், மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் விபத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரு வாரத்திற்குள், மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் விபத்து
    மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் விபத்து!

    ஒரு வாரத்திற்குள், மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் விபத்து

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 28, 2023
    06:08 pm

    செய்தி முன்னோட்டம்

    விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது EVP சிட்டியில் நடைபெற்று வருகிறது.

    சென்ற வாரம் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தில் இருந்து அதிர்ஷ்ட வசமாக, விஷாலும், SJ சூர்யாவும் உயிர் தப்பிய நிலையில், இந்த படப்பிடிப்பு தளத்தில் மற்றுமொரு விபத்து நிகழ்ந்துள்ளது.

    அதில், லைட் கம்பம் அறுந்து விழுந்து, லைட்ஸ்மேன் ஒருவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது எனவும், அதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    சென்ற பிப்.,22 -ஆம் தேதி, இது போல ஒரு விபத்து நிகழ்ந்தது. சண்டை காட்சியொன்றில், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி கட்டுப்பாட்டை இழந்த டிரக் ஒன்று மோதியது. அதிர்ஷ்டவசமாக, அவர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.

    ட்விட்டர் அஞ்சல்

    மீண்டும் விபத்து!

    #JUSTIN | விஷால் படப்பிடிப்பில் மீண்டும் விபத்து

    ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவரும் நடிகர் விஷாலின் 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் மீண்டும் விபத்து

    லைட்மேன் தலையில் லைட் கம்பம் விழுந்து நெற்றியில் காயம் - மருத்துவமனையில் அனுமதி#Chennai #vishal #markantony pic.twitter.com/HghBquJdAV

    — Thanthi TV (@ThanthiTV) February 28, 2023

    திரைப்படம்

    திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ வேண்டி RK செல்வமணி கோரிக்கை

    இரு தினங்களுக்கு முன்னர் தான், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'திரைப்படத்துறையில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஆபத்தான, சிரமமான நிலையிலேயே இருந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் திரைப்படத் துறைக்கு செய்யும் உதவிகள் மேலோட்டமாகவே நின்று விடுகின்றன".

    "இதுவரை திரைப்படத்துறையில் பணிபுரியும்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்களை காப்பாற்ற எந்த வழியும் இல்லை. ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் பணிபுரியும்போது இறந்தால் மட்டுமே அவர்களுக்கு ஏதோ ஒரு உதவி கிடைக்கிறது. ஆனால் சிரமப்பட்டு திரைப்படம் தாயாரிக்கின்ற சிறு தயாரிப்பாளர்களின் படங்களில் பணிபுரியும்போது விபத்து ஏறபட்டால் அவர்களை காப்பாற்ற எந்த நாதியுமில்லை", எனக்குறிப்பிட்டிருந்தார்.

    இவரின் கோரிக்கையை ஏற்று A.R.ரஹ்மான், சென்னையில் இசைக்கச்சேரி நடத்தப்போகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரைப்பட அறிவிப்பு
    தமிழ் திரைப்படம்
    கோலிவுட்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    திரைப்பட அறிவிப்பு

    காந்தாரா 2 -இன் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கப்பட்டு, அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தகவல் திரைப்பட துவக்கம்
    தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது தனுஷ்
    'பரிதாபங்கள்' கோபி - சுதாகர் நடிக்கும் புதிய படம் இன்று தொடக்கம் திரைப்பட துவக்கம்
    1000 திரையரங்குளில் ரீ ரிலீஸாகும் கமலின் ஆளவந்தான்! குஷியில் ரசிகர்கள்; கமலஹாசன்

    தமிழ் திரைப்படம்

    'தி லெஜண்ட்' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறதா? ஓடிடி
    அப்பா-மகன் என இருவருடனும் ஜோடியாக நடித்த பிரபல நடிகைகள் தமிழ் திரைப்படங்கள்
    29 வருடங்களுக்கு பிறகு 'அஜித் 62'வில் இணையும் அஜித் -அரவிந்த்சாமி கூட்டணி நடிகர் அஜித்
    புத்தகமாக வெளியாகும் ஜெய்பீம்; சென்னை புத்தகக் கண்காட்சியில் இன்று வெளியீடு நடிகர் சூர்யா

    கோலிவுட்

    இடஒதுக்கீடு பற்றி கருத்து தெரிவித்த 'வாத்தி' இயக்குநர்: சர்ச்சையாகும் பேச்சு தனுஷ்
    "மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்": நடிகை ஸ்ரேயா பேச்சு ரஜினிகாந்த்
    'அரண்மனை 4' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல் என தகவல் விஜய் சேதுபதி
    கர்நாடகாவில் பிறந்து, தென்னிந்திய திரையுலகத்தை ஆளும் நடிகைகள் தமிழ் திரைப்படங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025