NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "பயமாக உணர்ந்தேன்": அத்துமீறல் விவகாரம் குறித்து மனம் திறந்த நடிகை அபர்ணா பாலமுரளி
    பொழுதுபோக்கு

    "பயமாக உணர்ந்தேன்": அத்துமீறல் விவகாரம் குறித்து மனம் திறந்த நடிகை அபர்ணா பாலமுரளி

    "பயமாக உணர்ந்தேன்": அத்துமீறல் விவகாரம் குறித்து மனம் திறந்த நடிகை அபர்ணா பாலமுரளி
    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 24, 2023, 10:46 am 1 நிமிட வாசிப்பு
    "பயமாக உணர்ந்தேன்": அத்துமீறல் விவகாரம் குறித்து மனம் திறந்த நடிகை அபர்ணா பாலமுரளி
    அத்துமீறல் விவகாரம் தொடர்பாக நடிகை அபர்ணா பாலமுரளி கருத்து

    சென்ற ஜனவரி 18 -ஆம் தேதி, எர்ணாகுளம் சட்ட கல்லூரி விழாவில் பங்கேற்ற நடிகை அபர்ணா பாலமுரளியிடம், ஒரு மாணவர் அத்துமீற முயன்ற விவகாரம், சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, தற்போது, அது பற்றி தனது கருத்தை கூறியுள்ளார் அபர்ணா. நேற்று(ஜனவரி 23), 'தங்கம்' பட ப்ரோமோஷனுக்காக கொச்சிக்கு படக்குழுவினருடன் வந்திருந்தவரிடம், நிருபர்கள் இது பற்றி கேட்டபோது, "அந்த நபரை எனக்கு முன்பின் தெரியாது. அதனால், அவர் என் தோளின் மீது கை போட முயன்ற போது நான் விலகி சென்றேன். மன்னிப்பு தெரிவித்து, மீண்டும் கை குலுக்க வந்த போது, எனக்கு பயமாக இருந்தது. அதனால் நான் மறுத்து விட்டேன்," என்றார்.

    அத்துமீறல் விவகாரம் தொடர்பாக பேசிய அபர்ணா

    ആ സംഭവം വളരെ ഷോക്ക് ആയിരുന്നു, ലോ കോളേജ് വിഷയത്തിൽ പ്രതികരിച്ച് അപർണ ബാലമുരളി #AparnaBalamurali #Ernakulam #LawCollege #Kerala #ThangamMovie pic.twitter.com/ADBJeh4frt

    — OneIndia Malayalam (@thatsMalayalam) January 23, 2023

    "ஒரு சட்ட கல்லூரி மாணவன் அப்படி நடந்திருக்க கூடாது"

    "அது ஒரு மோசமான அனுபவம். என்றாலும், அங்கிருந்த மாணவர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்டதை அடுத்து, நான் வழக்கு எதுவும் தொடுக்கவில்லை" என்றார். தொடர்ந்து பேசிய அபர்ணா, "கல்லூரி நிர்வாகம், அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால், ஒரு சட்டக்கல்லூரி மாணவர் அவ்வாறு நடந்திருக்க கூடாது என எனக்கு தோன்றியது" என்று மேலும் தெரிவித்தார். இந்த விவாகரத்திற்கு பிறகு, எர்ணாகுளம் மாணவர் சங்கம், நடிகையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி ஒரு கடிதத்தை, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தது. சம்மந்தப்பட்ட அந்த மாணவனை, கல்லூரி நிர்வாகம் 7 நாட்கள் தற்காலிக இடை நீக்கம் செய்தது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்

    வைரல் செய்தி

    சினிமாவில் இருக்கும் ஊதிய வேறுபாடு குறித்து தெரிவித்த சமந்தா சமந்தா ரூத் பிரபு
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள் சமந்தா ரூத் பிரபு
    மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, நடிகை டாப்ஸி மீது புகார் கோலிவுட்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023