NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவின் தரத்தை பற்றி நடிகர் பார்த்திபன் புகார்; ரயில்வேயின் பதில் என்ன?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவின் தரத்தை பற்றி நடிகர் பார்த்திபன் புகார்; ரயில்வேயின் பதில் என்ன?
    உணவின் தரத்தை பற்றி நடிகர் பார்த்திபன் புகார்

    வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவின் தரத்தை பற்றி நடிகர் பார்த்திபன் புகார்; ரயில்வேயின் பதில் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 15, 2024
    02:14 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை இயங்கி வரும் நிலையில், இந்த ரயில் குறித்து கிடைக்கும் புகார்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

    சமீபத்தில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், வந்தே பாரத் ரயிலில் உணவு சரியாக இல்லை என்று புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.

    புகாரின் நகலையும் அவர் பதிவிட்டுள்ளார். தனது டீவீட்டில் அவர் தெரிவித்ததாவது,"உணவு பறிமாறியவர்கள் சிறப்பாக செயல்பட்டனர், ட்ரெய்ன் சுகாதாரமாக இருந்தது. ஆனால், இரவு 19:22 மணிக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் கிச்சன் மிகவும் மோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகை செலவழித்து இப்படியெல்லாம் பறிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம்" என தெரிவித்துள்ளார்.

    embed

    Twitter Post

    முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. 'வந்தே பாரத்'-தில் தந்தே உணவு தரமாக இல்லை . பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். நானதில் தொடர்ந்து... pic.twitter.com/GmyyeTLLVb— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 14, 2024

    பதில் 

    ரயில்வேயின் பதில் என்ன?

    இந்த புகார் தற்போது இணையத்தில் வைரலாக பரவியுள்ளது, மேலும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    பார்த்திபன் இந்த பதிவை வெளியிட சில மணிநேரங்களுக்குப் பிறகு, இரவு 7 மணியளவில், சேலம் ரயில்வே கோட்டத்தின் கோட்ட ரயில்வே மேலாளர் புகாருக்கு பதிலளித்து, "உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். சேவை குறைபாடு குறித்து சம்பந்தப்பட்ட உரிமதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உணவு தரத்தை மேம்படுத்த பேஸ் கிச்சன் மற்றும் ஆன் போர்டு ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது" என பதிலளித்தது குறிப்பிடதக்கது.

    embed

    Twitter Post

    We deeply regret the inconvenience caused. The concerned licensee is being taken up for the service deficiency. Also the Base Kitchen and on board inspection are being intensified to improve the food quality.— DRM Salem (@SalemDRM) October 14, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வந்தே பாரத்
    ரயில்கள்
    தெற்கு ரயில்வே

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    வந்தே பாரத்

    சென்னை விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    பிரதமர் மோடி சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலினை கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!  பிரதமர் மோடி

    ரயில்கள்

    சென்னையில் நாளை முதல் வழக்கம்போல் மின்சார ரயில் சேவை; ரயில்வே அறிவிப்பு சென்னை
    ஊட்டியில் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து: எப்போது வரை தெரியுமா? ஊட்டி
    பெங்களூர் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு பெங்களூர்
    வேளாங்கண்ணி தேர்த்திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் திருவிழா

    தெற்கு ரயில்வே

    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு வந்தே பாரத்
    2,800 கோடி செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ரயில்வே திட்டம்! ரயில்கள்
    நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன? வந்தே பாரத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025