Page Loader
கைதி 2 குறித்து நடிகர் கார்த்தியே கூறிய முக்கிய அப்டேட்
தான் 2 படங்களை நடித்து முடிந்துவிட்டதாக கூறினார் கார்த்தி

கைதி 2 குறித்து நடிகர் கார்த்தியே கூறிய முக்கிய அப்டேட்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 09, 2024
06:32 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த மே மாதம், நடிகர் கார்த்தியின் பிறந்தநாளின் போது, அவரது ரசிகர்கள் ரத்த தான முகாம்களை நடத்தினர். அதில் ரத்த தானம் செய்தவர்களை நேரில் அழைத்து பாராட்டி அவர்களுக்கு சென்னையில் இன்று விருந்தளித்தார் நடிகர் கார்த்தி. அப்போது அவர்களிடம் உரையாடிய கார்த்தி, தான் 2 படங்களை நடித்து முடிந்துவிட்டதாக கூறினார். அதோடு, அப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். அதோடு அடுத்ததாக 'சர்தார் 2' படத்தில் நடிக்க உள்ளதாகவும், இதற்கிடையே 2025-இல் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து 'கைதி 2' படத்தில் நடிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். "மீண்டும் பிரியாணி பக்கெட்டை கையில் எடுக்க வேண்டியது தான்" எனக்கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ரத்த தானம்

ரத்த தானம் செய்த ரசிகர்களை பாராட்டிய கார்த்தி 

முன்னதாக தன் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் ரத்த தானம் செய்தவர்களுக்கு நன்றி கூறினார் கார்த்தி. "நான் மருத்துவர்களுடன் குழுவில் இருக்கிறேன். அவர்கள் ரத்தம் இல்லை என்று கூறுவதை கேட்டிருக்கிறேன். முக்கியமாக அரசு மருத்துவமனைக்கு பெரிய அளவில் யாரும் ரத்தம் கொடுப்பதில்லை. அவரவர் தங்களின் உறவினர்களுக்கு கொடுத்துக் கொள்வார்கள்". "யாரென்றே தெரியாதவர்களுக்கு ரத்தம் கொடுத்துள்ளீர்கள். அது சாதாரண விஷயமே கிடையாது. அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. அதுவும் அரசு மருத்துவமனையில் செய்ததற்கு நன்றி" என்றார்.