Page Loader
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது மத்திய அரசு
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது மத்திய அரசு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 07, 2025
04:18 pm

செய்தி முன்னோட்டம்

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக மத்திய அரசு திங்கட்கிழமை (ஏப்ரல் 7) அறிவித்தது. உயர்த்தப்பட்ட பிறகு, வரி விகிதங்கள் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.13 மற்றும் டீசலுக்கு ரூ.10 என இருக்கும். இது செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி அதிகரிப்பு இருந்தபோதிலும், பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் மாறாமல் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிடிஐ மேற்கோள் காட்டிய தொழில்துறை வட்டாரங்களின் அறிக்கைகளின்படி, சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சரிவுகளையொட்டி, கலால் விலை உயர்வு அதை ஈடுசெய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.

கலால் வரி

கலால் வரியில் ஏற்ற இறக்கம்

சர்வதேச சந்தையில் விலை மாற்றத்தை ஈடு செய்யும் வகையில் கலால் வரியில் ஏற்ற இறக்கங்களை மேற்கொள்வதன் மூலம், மக்களுக்கு நிலையான விலையில் எரிபொருள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்கிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவின் மூலம், கலால் வரி அதிகரிப்பைத் தொடர்ந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியளித்துள்ளன என்பதை உறுதிப்படுத்தியது. 1944 ஆம் ஆண்டு மத்திய கலால் வரிச் சட்டத்தின் பிரிவு 5A மற்றும் 2002 ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தின் பிரிவு 147 ஆகியவற்றின் கீழ் வரி அதிகரிப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அரசு உத்தரவு