NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / வைப்புத்தொகைக்கான காப்பீட்டு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    வைப்புத்தொகைக்கான காப்பீட்டு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை
    வைப்புத்தொகைக்கான காப்பீட்டு வரம்பை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை

    வைப்புத்தொகைக்கான காப்பீட்டு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 17, 2025
    04:38 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அரசு வங்கி வைப்புத் தொகைக்கான தற்போதைய ₹5 லட்சம் காப்பீட்டு வரம்பை உயர்த்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று (பிப்ரவரி 17) உறுதிப்படுத்தினார்.

    நியூ இந்தியா கூட்டுறவு வங்கி மோசடி உள்ளிட்ட சமீபத்திய வங்கி மோசடிகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை செயலாளர் எம். நாகராஜு இதுகுறித்து கூறுகையில், இந்த திட்டம் மதிப்பாய்வில் உள்ளது என்றும், ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (DICGC) வங்கி வைப்புத்தொகைகளுக்கு காப்பீட்டை வழங்குகிறது.

    கடந்த காலங்களில் முதன்மையாக கூட்டுறவு வங்கிகளுக்கான கோரிக்கைகளை இது தீர்த்து வைத்துள்ளது.

    முந்தைய உயர்வு

    கடந்த கால காப்பீட்டுத் தொகை உயர்வு

    பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நெருக்கடியைத் தொடர்ந்து காப்பீட்டு வரம்பு கடைசியாக 2020 இல் ₹1 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கீழ் கூட்டுறவு வங்கித் துறை நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்று பொருளாதார விவகார செயலாளர் அஜய் சேத் தெரிவித்தார்.

    ஒரு வங்கியில் உள்ள சிக்கல்கள் முழுத் துறையிலும் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

    நிதி முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஒழுங்குமுறை அமைப்புகள் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார்.

    நியூ இந்தியா கூட்டுறவு வங்கி

    நியூ இந்தியா கூட்டுறவு வங்கி மோசடியில் விபரம்

    நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி, ஒரு ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் கணக்குகளில் ₹122 கோடி முரண்பாடு இருப்பது தெரியவந்தது.

    அந்த வங்கியின் நிதித்துறை பொது மேலாளரான ஹிதேஷ் மேத்தா, நிதியில் கணிசமான பகுதியை தவறாகப் பயன்படுத்தி, உள்ளூர் கட்டுமான நிறுவனத்திற்கு கொடுத்ததாகக் கூறப்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

    இதனால் வங்கியின் செயல்பாடுகள் ஆர்பிஐயால் முடக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் எந்த வரவு செலவும் மேற்கொள்ள முடியாது.

    எனினும், DICGC காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வங்கியின் 1.3 லட்சம் வாடிக்கையாளர்களில் 90 சதவீதம் பேர் தங்கள் முழு சேமிப்பையும் பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    வங்கிக் கணக்கு
    மத்திய அரசு

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    ரிசர்வ் வங்கி

    UPI Liteக்கான பரிவர்த்தனை வரம்பு ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது  யுபிஐ
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.7 பில்லியன் டாலர்கள் குறைந்தது; ஆர்பிஐ அறிக்கை இந்தியா
    தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி இந்தியா
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவு இந்தியா

    வங்கிக் கணக்கு

    அஞ்சல் நிலையங்களா? வங்கிகளா? எங்கு நிரந்தர வைப்புநிதி கணக்கு தொடங்குவது?  முதலீடு
    ஆதார் எண்ணைக் பயன்படுத்தி யுபிஐ கணக்கை தொடங்கும் புதிய வசதி.. எப்படி? யுபிஐ
    NEFT, RTGS, IMPS.. எந்தப் பணப்பரிவர்த்தனை முறை சிறந்தது? இந்தியா
    கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி

    மத்திய அரசு

    டிஜிட்டல் பர்சனல் டேட்டா பாதுகாப்பு வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு இந்தியா
    இந்தியாவில் 18 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக் கட்டுப்பாடு? வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு சமூக ஊடகம்
    எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் திட்டத்தைத் தொடங்கியது மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஆப்கான் பொதுமக்கள் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்; வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியுறவுத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025