தமிழகத்தில் ரூ.38,000 கோடி முதலீடு: ஹுண்டாய் நிறுவனத்துடன் மெகா கப்பல் கட்டும் தளம், 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, மாநிலத்தின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் களம் இறங்கியுள்ளது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் கடல்சார் பொருளாதார வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக, தூத்துக்குடியில் சுமார் 38,000 கோடி ரூபாய் (4 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீட்டில் பிரம்மாண்டமான பசுமைக்கள கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான பணிகள் அதிகாரப்பூர்வமாக அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன.
பேச்சுவார்த்தை
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை
இந்த திட்டம் தொடர்பாக, தென் கொரியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான 'எச்டி ஹுண்டாய்' நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவின் இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை நேற்று நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஹுண்டாய் நிறுவனத்தின் இந்த முதலீட்டுத் திட்டம், அதன் நிதி அளவீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு விவரங்கள் வெளிவந்துள்ள முதல் அதிகாரப்பூர்வ நிகழ்வு இதுவாகும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
To the best of my knowledge, this is the first OFFICIAL document specifying the scale of HD Hyundai’s planned shipbuilding investment ($4B) in Tamil Nadu.
— Kyunghoon Kim (@Kyunghoon_Kim_) June 17, 2026
A significant step forward for Korea-India maritime cooperation.
Thank you for the seamless coordination. @Keerthana4VNR https://t.co/Y4dP38qoZT
வேலைவாய்ப்பு
15,000 பேருக்கு நேரடி உயர்தர வேலைவாய்ப்பு
தூத்துக்குடியில் அமையவிருக்கும் இந்த அதிநவீன பசுமைக்கள கப்பல் கட்டும் தள திட்டத்தின் மூலம் சுமார் 15,000 நபர்களுக்கு நேரடியாக தொழில்நுட்ப மற்றும் பொறியியல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன. கப்பல் கட்டும் தொழிலைச் சார்ந்த உபகரணங்கள் தயாரிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தளவாட சேவைகள் மற்றும் பொறியியல் விநியோகச் சங்கிலி மூலம் மறைமுகமாக பல்லாயிரக்கணக்கானோருக்குப் புதிய வாழ்வாதார வாய்ப்புகள் உருவாகும். இப்பாரிய திட்டத்தை எவ்வித நிர்வாக தாமதமுமின்றி விரைவாக செயல்படுத்துவதற்காக, தமிழக அரசின் சிப்காட் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இணைந்து 'நேஷனல் ஷிப்பில்டிங் & ஹெவி இண்டஸ்ட்ரீஸ் பார்க் தமிழ்நாடு லிமிடெட்' (NSHIPTN) என்ற பிரத்யேக சிறப்பு நோக்க அமைப்பை உருவாக்கியுள்ளன.