NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்திய நிறுவனங்கள் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் OCCRP அமைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய நிறுவனங்கள் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் OCCRP அமைப்பு
    இந்திய நிறுவனங்கள் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் OCCRP அமைப்பு

    இந்திய நிறுவனங்கள் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் OCCRP அமைப்பு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 25, 2023
    11:00 am

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த வணிகக் குழுமமான அதானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    அந்த ஆய்வறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள், பங்குச்சந்தையில் கடும் சரிவைச் சந்தித்தன.

    தற்போது OCCRP என்ற மற்றொரு புலனாய்வு அமைப்பொன்று, குறிப்பிட்ட சில இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை அம்பலப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள 24 லாப நோக்கமற்ற புலனாய்வு மையங்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர். 2006-ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, இதுவரை உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், நிறுவனங்கள் மற்றும் முக்கிய குற்றங்கள் குறித்து புலனாய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    வணிகம்

    என்ன விதமான தகவல்களை வெளியிடவிருக்கிறது OCCRP? 

    குறிப்பிட்ட இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்த தகவல்களை OCCRP அமைப்பு வெளியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், எந்தெந்த இந்திய நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவிருக்கின்றன எனத் தெரியவில்லை.

    உலக பணக்காரர்களுள் ஒருவரான ஜார்ஜ் சாரோஸ் மற்றும் ராக்ஃபெல்லர் பிரதர்ஸ் ஃபண்டு ஆகியோர் இந்த புலனாய்வு நிறுவனத்திற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    இதுவரை இந்நிறுவனம் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகளின் பலனாக அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் Ceo-க்கள் என 131 பேர் தங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள், 621 கைதுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன மற்றும் 702 அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

    இந்த அமைப்பின் திட்டங்களில் பணிபுரிந்து பல்வேறு பத்திரிகையாளர்கள் உலகம் முழுவதும், பல்வேறு புலனாய்வு இதழியலுக்கான விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா உக்ரைன்
    வால்மார்ட் தனது பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்  வால்மார்ட்
    'எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் உண்மையானவர்கள், மற்றவர்கள் பணத்தால் வாங்கப்பட்டவர்கள்': சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  எம்எஸ் தோனி
    ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு ஹைதராபாத்

    வணிகம்

    2031-ல் 6.7 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக மாறும் இந்தியா! இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 7 தங்கம் வெள்ளி விலை
    அலுவலகத்திலிருந்து வேலை பார்ப்பதன் அவசியத்தை குறிப்பிடும் ஆய்வறிக்கை உலகம்
    டெஸ்லாவின் புதிய CFO-வாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தானேஜா டெஸ்லா

    இந்தியா

    மத்திய உள்துறை அமைச்சக ஊழியா்கள் மீது அதிக ஊழல் புகாா்: சிவிசி தகவல் மத்திய அரசு
    இலங்கையிடமிருந்து கச்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி  இலங்கை
    இந்தியாவில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா
    நாளை அறிமுகமாகிறது இந்தியாவிற்கான வாகன தர நிர்ணயத் திட்டமான 'பாரத் NCAP' நிதின் கட்கரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025