NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பாரத்பேயின் தலைமை வணிக அதிகாரியாக செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் பதவி விலகினார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாரத்பேயின் தலைமை வணிக அதிகாரியாக செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் பதவி விலகினார்
    பாரத்பேயின் தலைமை வணிக அதிகாரியாக செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் பதவி விலகினார்

    பாரத்பேயின் தலைமை வணிக அதிகாரியாக செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் பதவி விலகினார்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 05, 2023
    07:15 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவைச் சேர்ந்த நிதிச் சேவை வழங்கி வரும் நிறுவனமான பாரத்பே நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாகச் செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.

    பாரத்பே நிறுவத்திலிருந்து விலகியிருப்பதாக தன்னுடைய லிங்க்டுஇன் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார் அவர். அந்தப் பதிவில் கடந்த 3.5 ஆண்டுகளாக பாரத்பேயில் பணியாற்றியது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்ததாகப் பதிவிட்டிருக்கிறார் அவர்.

    கடந்த ஆண்டிலிருந்தே தொடர்ந்து பாரத்பே நிறுவனத்தின் பல்வேறு உயர் நிலை நிர்வாகிகள் பதவி விலகி வருகிறார்கள். தற்போது அந்நிறுவனத்திலிருந்து பதவி விலகியிருப்பதன் மூலம், பாரத்பேயிலிருந்த பதவி விலகிய முக்கிய அதிகாரிகள் பட்டியலில் இணைந்திருக்கிறார நிஷாந்த் ஜெயின்.

    வணிகம்

    பாரத்பே நிறுவனத்திலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள்: 

    முன்னதாக கடந்த வாரம், பாரத்பே நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான துருவ் தன்ராஜ் பால் பதிவி விலகினார்.

    அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு, அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான விஜய் அகர்வால், போஸ்ட்பே தலைவரான நெகுல் மல்கோத்ரா மற்றும் தலைமை தயாரிப்பு அதிகாரியா ரஜத் ஜெயின் ஆகியோர் பதவி விலகினர்.

    மேலும், பாரத்பேயின் தொழில்நுட்ப துணை தலைவரான கீதான்ஷூ சிங்லா, தலைமை வருவாய் அதிகாரியான நிஷித் ஷர்மா மற்றும் பாரத்பேயின் துணை நிறுவனர்களுள் ஒருவரான பவிக் கொலாதியா ஆகியோரும் கடந்தாண்டு அந்நிறுனத்திலிருந்து பதவி விலகினர்.

    பாரத்பேயில் இருந்து பதவி விலகிய அனைவருமே, அந்நிறுவனத்தின் முன்னார் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவான அஷ்னீர் குரோவரின் பதவிக்காலத்தில் பணியில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 14 தங்கம் வெள்ளி விலை
    கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை மீண்டும் உயர்த்தியது மத்திய அரசு மத்திய அரசு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 15 தங்கம் வெள்ளி விலை
    சொந்த நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகத்தை மேற்கொண்ட இந்தியா மற்றும் UAE இந்தியா

    இந்தியா

    உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரிசி வகைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் உலகம்
    100 கிராம் பம்ப்கின் விதைகள் - மறைந்திருக்கும் நன்மைகள்  உலகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு வணிகம்
    ரத்த அழுத்தம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் நவீன மோதிரம்: முன்னாள் IIT மாணவர்கள் சாதனை ஐஐடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025