NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பாரத்பேயின் தலைமை வணிக அதிகாரியாக செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் பதவி விலகினார்
    பாரத்பேயின் தலைமை வணிக அதிகாரியாக செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் பதவி விலகினார்
    வணிகம்

    பாரத்பேயின் தலைமை வணிக அதிகாரியாக செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் பதவி விலகினார்

    எழுதியவர் Prasanna Venkatesh
    September 05, 2023 | 07:15 pm 0 நிமிட வாசிப்பு
    பாரத்பேயின் தலைமை வணிக அதிகாரியாக செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் பதவி விலகினார்
    பாரத்பேயின் தலைமை வணிக அதிகாரியாக செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் பதவி விலகினார்

    இந்தியாவைச் சேர்ந்த நிதிச் சேவை வழங்கி வரும் நிறுவனமான பாரத்பே நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாகச் செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார். பாரத்பே நிறுவத்திலிருந்து விலகியிருப்பதாக தன்னுடைய லிங்க்டுஇன் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார் அவர். அந்தப் பதிவில் கடந்த 3.5 ஆண்டுகளாக பாரத்பேயில் பணியாற்றியது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்ததாகப் பதிவிட்டிருக்கிறார் அவர். கடந்த ஆண்டிலிருந்தே தொடர்ந்து பாரத்பே நிறுவனத்தின் பல்வேறு உயர் நிலை நிர்வாகிகள் பதவி விலகி வருகிறார்கள். தற்போது அந்நிறுவனத்திலிருந்து பதவி விலகியிருப்பதன் மூலம், பாரத்பேயிலிருந்த பதவி விலகிய முக்கிய அதிகாரிகள் பட்டியலில் இணைந்திருக்கிறார நிஷாந்த் ஜெயின்.

    பாரத்பே நிறுவனத்திலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள்: 

    முன்னதாக கடந்த வாரம், பாரத்பே நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான துருவ் தன்ராஜ் பால் பதிவி விலகினார். அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு, அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான விஜய் அகர்வால், போஸ்ட்பே தலைவரான நெகுல் மல்கோத்ரா மற்றும் தலைமை தயாரிப்பு அதிகாரியா ரஜத் ஜெயின் ஆகியோர் பதவி விலகினர். மேலும், பாரத்பேயின் தொழில்நுட்ப துணை தலைவரான கீதான்ஷூ சிங்லா, தலைமை வருவாய் அதிகாரியான நிஷித் ஷர்மா மற்றும் பாரத்பேயின் துணை நிறுவனர்களுள் ஒருவரான பவிக் கொலாதியா ஆகியோரும் கடந்தாண்டு அந்நிறுனத்திலிருந்து பதவி விலகினர். பாரத்பேயில் இருந்து பதவி விலகிய அனைவருமே, அந்நிறுவனத்தின் முன்னார் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவான அஷ்னீர் குரோவரின் பதவிக்காலத்தில் பணியில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    வணிகம்
    இந்தியா

    வணிகம்

    தாமதமாகும் ஊதியத்தை தொகுதிகளாகப் பிரித்து வழங்கத் திட்டமிட்டிருக்கும் Dunzo இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 5 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 4 தங்கம் வெள்ளி விலை
    அரிசி ஏற்றுமதியை தடை செய்திருக்கும் இந்தியா.. உலகளவில் உயரும் அரிசி விலை! இந்தியா

    இந்தியா

    இந்தியாவின் பெயர் மாற்றப்படுகிறதா: கொந்தளிக்கும் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள்  எதிர்க்கட்சிகள்
    பாரத், பாரதம், இந்தியா..மூன்றிற்குமான வித்தியாசம் என்ன? அரசியலைப்பின்படி எது சரியான பெயர்? பாரத்
    ஜி20 உச்சி மாநாடு: எந்தெந்த உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வர இருக்கிறார்கள்? ஜி20 மாநாடு
    இந்திய மற்றும் உலக அளவில் இன்றைய கொரோனா நிலவரம்  கொரோனா
    அடுத்த செய்திக் கட்டுரை

    வணிகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Business Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023