NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஆசியாவின் பில்லியனர் தலைநகராக முன்னேறியுள்ளது மும்பை: அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசியாவின் பில்லியனர் தலைநகராக முன்னேறியுள்ளது மும்பை: அறிக்கை
    இது வரை இந்த இடத்தை பெற்றிருந்த பெய்ஜிங்கை முந்தியுள்ளது மும்பை நகரம்

    ஆசியாவின் பில்லியனர் தலைநகராக முன்னேறியுள்ளது மும்பை: அறிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 27, 2024
    05:54 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்திய ஹுருன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் உலகளாவிய பணக்காரர் பட்டியலின்படி, முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான பில்லியனர்களுடன், ஆசிய தலைநகர் என்ற பட்டத்தை மும்பை பெற்றுள்ளது.

    இது வரை இந்த இடத்தை பெற்றிருந்த பெய்ஜிங்கை முந்தியுள்ளது மும்பை நகரம்.

    இது இந்தியாவிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

    ஆசியாவிலேயே செல்வத்தை உருவாக்குவதில் மும்பையை முன்னணியில் உள்ளது.

    இந்தியாவின் நிதி மையமான மும்பை, சமீபத்திய ஹுருன் பணக்காரர் பட்டியலின்படி, ஆசிய தரவரிசையில் பெய்ஜிங் (91) மற்றும் ஷாங்காய் (87) ஆகிய இரண்டையும் விஞ்சி, 92 பில்லியனர்களுடன் முன்னேறியுள்ளது.

    119 பில்லியனர்களைக் கொண்ட நகரங்களுக்கான உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் நியூயார்க் முன்னணியில் உள்ளது.

    அதற்கு அடுத்தபடியாக லண்டன் 97 பேருடன் உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    பில்லியனர் தலைநகர் மும்பை

    Marking a historic milestone, Mumbai has emerged as Asia's billionaire epicenter, surpassing Beijing for the first time ever. The 2024 Hurun Global Rich List underscores India's escalating influence on the global platform. pic.twitter.com/F6f88BOF8M

    — HURUN INDIA (@HurunReportInd) March 26, 2024

    பில்லியனர் தர வரிசை

    உலகளவில் அதிகரித்துள்ள பில்லியனர்கள்

    உலகளவில், இப்போது 3,279 பில்லியனர்கள் உள்ளனர்.

    இது முந்தைய ஆண்டை விட 5% அதிகமாகும். சீனா இன்னும் 814 பில்லியனர்களுடன் உலக நாடுகள் தரவரிசையில் முன்னணியில் இருந்தாலும், முந்தைய ஆண்டை விட 155 பில்லியனர்கள் இழந்து குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளது.

    800 பில்லியனர்களுடன் அமெரிக்கா பின்தங்கிய நிலையில் உள்ளது.

    இந்த தரவரிசையில், இந்தியா 271 பில்லியனர்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    "சமீப ஆண்டுகளில் சீனாவில் செல்வ உருவாக்கம் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் புதுப்பிக்கத்தக்க பொருட்களில் இருந்து பில்லியனர்களின் செல்வத்தில் சரிவு காணப்படுகிறது".

    "அமெரிக்காவில், செல்வந்தர்களின் அதிகரிப்புக்கு செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகித்தது"என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    பெய்ஜிங்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மும்பை

    மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி  மகாராஷ்டிரா
    SA vs BAN: இன்றைய ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை வங்கதேச கிரிக்கெட் அணி
    தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம்  பெங்களூர்
    உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள் டெல்லி

    பெய்ஜிங்

    சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி  சீனா
    சீனாவில் பரவி வரும் புதுவகை நிமோனியா காய்ச்சல்- விளக்கம் கேட்கும் உலக சுகாதார அமைப்பு சீனா
    சீனாவில் பரவும் புதிய வகை நிமோனியா பற்றி இதுவரை அறிந்தவை சீனா
    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை? சிங்கப்பூர்

    இந்தியா

    பிரதமருக்கு சொந்தமாக குடும்பம் இல்லை என்று கூறிய லாலு பிரசாத்துக்கு பதிலடி: 'மோடியின் குடும்பம்' என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ள முக்கிய தலைவர்கள் பிரதமர் மோடி
    தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்க கால அவகாசம் கோரியது எஸ்பிஐ  உச்ச நீதிமன்றம்
    மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை வழங்க இருக்கிறது சீனா மாலத்தீவு
    'மே 10-ம் தேதிக்கு மேல் இந்திய அதிகாரிகள் யாரும் மாலத்தீவில் இருக்க மாட்டார்கள்': மாலத்தீவு அதிபர் உறுதி  மாலத்தீவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025