NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பணமோசடி வழக்கு: ஜெட் ஏர்வேஸுக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பணமோசடி வழக்கு: ஜெட் ஏர்வேஸுக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்

    பணமோசடி வழக்கு: ஜெட் ஏர்வேஸுக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 01, 2023
    05:41 pm

    செய்தி முன்னோட்டம்

    பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெட் ஏர்வேஸ்(இந்தியா) லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் இன்று பறிமுதல் செய்துள்ளது.

    ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் மற்றும் அவர்களது மகன் நிவான் கோயல் ஆகியோரின் பெயரிலும் நிறுவனத்தின் பெயரிலும் இருந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    17 அடுக்குமாடி குடியிருப்பு பிளாட்டுகள், பங்களாக்கள் மற்றும் வணிக கட்டிடங்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் அடங்கும்.

    பணமோசடி தடுப்புச் சட்டம்(PMLA), 2002-ன் கீழ் குறைந்தபட்சம் ரூ. 538 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்தது.

    காவ்க்ங்க

    கனரா வங்கியிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த ஜெட் ஏர்வேஸ்

    பறிமுதல் செய்யப்பட்ட சில சொத்துக்கள் ஜெட்டேர் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜெட் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய பெயர்களிலும் பதிவு செய்யப்பட்டிருத்தன.

    கனரா வங்கி தாக்கல் செய்த மோசடி வழக்கில் நரேஷ் கோயல் மற்றும் 5 பேர் மீது அமலாக்க இயக்குநரகம் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கனரா வங்கி ரூ.848 கோடி வரை கடன் வழங்கி இருக்கிறது. ஆனால், அந்த கடன் தொகையில் 538 கோடி ரூபாயை ஜெட் ஏர்வேஸ் திருப்பி செலுத்தவில்லை.

    இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி, பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கு கீழ் நரேஷ் கோயலை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. அவர் தற்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமலாக்க இயக்குநரகம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    இந்தியா

    2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் குறையும்: ஐநா கணிப்பு  ஐநா சபை
    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 73 பதக்கங்கள் வென்று புதிய வரலாறு படைத்த இந்தியா  ஆசிய விளையாட்டுப் போட்டி
    மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம்; திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு நெறிமுறைக்குழு சம்மன் திரிணாமுல் காங்கிரஸ்
    இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும்: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025