NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஜிம்பாப்வே விமான விபத்தில் உயிரிழந்த இந்திய தொழிலதிபர் ஹார்பால் ரந்தாவா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜிம்பாப்வே விமான விபத்தில் உயிரிழந்த இந்திய தொழிலதிபர் ஹார்பால் ரந்தாவா
    ஜிம்பாப்வே விமான விபத்தில் உயிரிழந்த இந்திய தொழிலதிபர் ஹார்பால் ரந்தாவா

    ஜிம்பாப்வே விமான விபத்தில் உயிரிழந்த இந்திய தொழிலதிபர் ஹார்பால் ரந்தாவா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 03, 2023
    11:14 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் சுரங்கத் தொழில் அதிபருமான ஹார்பால் ரந்தாவா, ஜிம்பாப்வேயில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    கடந்த செப்டம்பர் 29ம் தேதி தன்னுடைய தனிப்பட்ட விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, தென்மேற்கு ஜிம்பாப்வே பகுதியில் உள்ள வைர சுரங்கத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

    அவர் மட்டுமின்றி, அவருடன் பயணம் செய்த அவருடைய மகன் அமெர் காபிர் சிங் ரந்தாவா மற்றும் உடன் சென்ற ஊழியர்கள் நால்வருடன் சேர்த்து மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த துயரச் சம்பவம் குறித்து ஹார்பால் ரந்தாவாவின் நண்பரும், திரைப்பட இயக்குநருமான ஜிம்பாப்வேயைச் சேர்ந்த ஹோப்வெல் சினோனா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

    இந்தியா

    ஹார்பால் ரந்தாவா யார்? 

    பல்வேறு வகையான சுரங்கத் தொழில்களில் ஈடுபட்டு வரும் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த ரியோஜிம் நிறுவனத்தின் உரிமையாளர் ஹார்பால் ரந்தாவா. இந்த நிறுவனமானது தங்கம் மற்றும் நிலகரியை உற்பத்தி செய்வதோடு, நிக்கல் மற்றும் காப்பரின் சுத்திகரிப்பையும் மேற்கொண்டு வருகிறது.

    தனியார் பங்கு வணிக நிறுவனமான ஜெம் ஹோண்டிங்ஸ் என்ற 4 பில்லியன் டாலர்கள் மதிப்பைக் கொண்ட நிறுவனத்தையும் நிறுவியிருக்கிறார் ஹார்பால் ரந்தாவா.

    ஜிம்பாப்வேயில் உள்ள தன்னுடைய சுரங்கங்களுள் ஒன்றான முரோவா வைரச் சுரங்கத்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. இந்த விமான விபத்து குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வணிகம்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    இந்தியா

    'பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய  அவசியம் நமக்கு இல்லை':  வெளியுறவுத்துறை அமைச்சர்  கனடா
    Sports RoundUp: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள்; தொடங்கின உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள்; டாப் விளையாட்டுச் செய்திகள்! ஆசிய விளையாட்டுப் போட்டி
    'இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் விதிவிலக்கானது': வெளியுறவுத்துறை அமைச்சர்  ரஷ்யா
    ஸ்காட்லாந்து குருத்வாராவிற்குள் இந்திய தூதரை நுழைய விடாமல் தடுத்த தீவிர சீக்கியர்கள் இங்கிலாந்து

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 31 தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள் இந்தியா
    இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு இந்தியா
    அதிரடியாக குறைந்த வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை அமைச்சரவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025