NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் $2,000 உயரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் $2,000 உயரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணிப்பு
    அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் $2,000 உயரும் என கணிப்பு

    அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் $2,000 உயரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 04, 2024
    07:47 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் கணிசமாக அதிகரிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணித்துள்ளார்.

    ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியால் உந்தப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனிநபர் வருமானம் குறைந்தபட்சம் $2,000 உயரும் என்று அவர் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

    பொருளாதார வளர்ச்சி நிறுவனம் (IEG) ஏற்பாடு செய்து, நிதி அமைச்சகத்தால் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட கௌடில்ய பொருளாதார மாநாட்டில் அவர் ஆற்றிய உரையின் போது இதை தெரிவித்துள்ளார்.

    இந்தியா தனது 2,730 டாலர் தனிநபர் வருமானத்தை எட்ட 75 ஆண்டுகள் ஆனது என்று கூறிய நிர்மலா சீதாராமன், வலுவான முதலீடுகள், வலுவான அடிப்படைகள் மற்றும் நிலையான கொள்கை சீர்திருத்தங்கள் காரணமாக அடுத்த அதிகரிப்பு மிக வேகமாக நிகழும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    இளைஞர்கள்

    43% இளைஞர்கள்

    இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 43% மக்கள்தொகை 24 வயதுக்குட்பட்டவர்கள் என்பது நுகர்வு வளர்ச்சியைத் தூண்டும் காரணியாகும் என்று நிதியமைச்சர் கூறினார்.

    தற்போது வளர்ச்சி சவால்களை எதிர்கொண்டுள்ள பல முன்னேறிய பொருளாதாரங்களை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாக நிதியமைச்சர் வலியுறுத்தினார்.

    தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் மறுசீரமைப்பு, மூலோபாய ரீதியாக சீரமைக்கப்பட்ட நாடுகளுடன் வலுவான விநியோகச் சங்கிலிகளை வளர்ப்பதன் மூலம் இந்தியாவுக்கு பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதற்கிடையே, நிதி ஆயோக்கின் ஒரு முக்கிய ஆவணத்தின்படி, 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா $18,000 தனிநபர் வருமானத்துடன் $30 டிரில்லியன் பொருளாதாரமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நாடு விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நிர்மலா சீதாராமன்
    நிர்மலா சீதாராமன்
    பொருளாதாரம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றில் முதல்முறை; வெளிநாட்டில் தொழிற்சாலையை அமைக்கிறது டாடா டாடா
    தேர்தல் பத்திரங்களைங் காட்டி மிரட்டியதாக புகார்; மத்திய நிதியமைச்சர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு நிர்மலா சீதாராமன்
    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம் ராகுல் காந்தி
    வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கம்; மத்திய அரசு உத்தரவு  மத்திய அரசு

    நிர்மலா சீதாராமன்

    ரிசர்வ் வங்கியின் தடைக்கு மத்தியில் பேடிஎம் சிஇஓ-வுக்கு அரசாங்கம் வழங்கிய ஆலோசனை  ரிசர்வ் வங்கி
    தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்: எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் மத்திய அரசு
    இந்திய பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
    மும்பை உள்ளூர் ரயிலில் பயணித்து பயணிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட நிர்மலா சீதாராமன் மும்பை

    நிர்மலா சீதாராமன்

    மோடியின் புதிய அமைச்சரவையில் 7 பெண்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பு  இந்தியா
    பட்ஜெட் 2024இல் என்னென்ன மாற்றங்கள் அறிமுகமாக வாய்ப்புள்ளது  இந்தியா
    பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் உட்பட இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கு இனி வரி கிடையாது: ஜிஎஸ்டி கவுன்சில் இந்தியா
    வரி விலக்கு கட்டாயமா? பட்ஜெட் 2024க்கு ஏன் நிலையான விலக்கு உயர்வு தேவை பட்ஜெட்

    பொருளாதாரம்

    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி இந்தியா
    "மூன்றில் இரண்டு பங்கு 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன" -ரிசர்வ் வங்கி ஆளுநர் ரிசர்வ் வங்கி
    உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி பிரதமர்
    2031-ல் 6.7 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக மாறும் இந்தியா! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025