NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை இறக்குமதி செய்யக் கட்டுப்பாடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை இறக்குமதி செய்யக் கட்டுப்பாடு
    லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை இறக்குமதி செய்யக் கட்டுப்பாடு

    லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை இறக்குமதி செய்யக் கட்டுப்பாடு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 03, 2023
    03:08 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் லேப்டாப்கள், டேப்லட்கள், பெர்சனல் கம்யூட்டர்கள், சர்வர்கள் மற்றும் இதர வகை சிறிய கணினிகள் ஆகிய மின்னணு சாதனங்களின் இறக்குமதியை புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிவித்திருக்கிறது மத்திய வர்த்தக அமைச்சகம்.

    மேற்கூறிய மின்னணு சாதனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், அதற்கான உரிமத்தைப் பெற்று, அதன்பின்பே இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் அறிவித்திருக்கிறது மத்திய வர்த்தக அமைச்சகம்.

    இந்தியாவில் பெட்ரோலியம் பொருட்களையடுத்து, அதிகளவில் இறக்குமதி செய்யப்படுபவை மின்னணு சாதனங்களே.

    நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி செய்யும் அளவு அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது மத்திய அரசு. கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.76 பில்லியன் டாலர்கள் அளவிலான மின்சாதனப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா

    மின்சாதனங்களை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கும் கட்டுப்பாடா? 

    மேற்கூறிய மின்சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. பேகேஜ் விதிமுறைகள் அடிப்படையில் கொண்டு வரப்படும் மின்சாதனப் பொருட்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறது.

    மேலும், விற்பனைக்காக அன்றி ஆராய்ச்சி, மேம்பாடு, பழுதுநீக்கம் மற்றும் பரிசோதனை உள்ளிட்ட இதர பயன்பாடுகளுக்காக மேற்கூறிய பொருட்களை இந்தியாவிற்குகள் கொண்டு வர விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், ஒரு முறையில் 20 மின்சாதனப் பொருட்களை மட்டுமே கொண்டு வரும் வகையில் அளவுகோளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    ஆனால், அப்படி கொண்டு வரப்படும் மின்சாதனப் பொருட்களை, குறிப்பிட்ட பயன்பாடு முடிந்ததும் பயன்படுத்த முடியாத வகையில் அழித்து விட வேண்டும் அல்லது மீண்டும் ஏற்றுமதி செய்துவிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வணிகம்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    இந்தியா

    லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராப்புறங்களில் இணையசேவை வழங்கத் திட்டமிட்டிருக்கும் ஏர்டெல் மற்றும் கூகுள் ஏர்டெல்
    நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: கேரள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை வானிலை ஆய்வு மையம்
    இந்திய மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    500 ரூபாய் நோட்டையும் திரும்பப் பெறும் திட்டத்தைக் கொண்டிருக்கிறதா மத்திய அரசு? ரிசர்வ் வங்கி

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 15 தங்கம் வெள்ளி விலை
    உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது விண்டுஃபால் வரிவிதித்த மத்திய அரசு மத்திய அரசு
    நேரடியாகத் தக்காளியைக் கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யவிருக்கும் மத்திய அரசு மத்திய அரசு
    சில்லறை விற்பனைக் கடைகளில் கவனம் செலுத்தவிருக்கும் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி ஸ்மார்ட்போன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025