NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% அதிகரித்தது மத்திய அரசு
    புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% அதிகரித்தது மத்திய அரசு
    வணிகம்

    புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% அதிகரித்தது மத்திய அரசு

    எழுதியவர் Sekar Chinnappan
    August 26, 2023 | 03:01 pm 1 நிமிட வாசிப்பு
    புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% அதிகரித்தது மத்திய அரசு
    புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% அதிகரித்தது மத்திய அரசு

    தற்போதைய பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில், உள்நாட்டில் விலையை நிலைப்படுத்தவும், சரக்குகளை அதிகரிக்கவும், புழுங்கல் அரிசிக்கு 20% ஏற்றுமதி வரியை இந்தியா அமல்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல், புழுங்கல் அரிசியின் விலை இந்தியாவில் 19% மற்றும் சர்வதேச அளவில் 26% உயர்ந்துள்ளது. பாஸ்மதி அல்லாத உடைந்த அரிசி மற்றும் வெள்ளை அரிசி மீதான சமீபத்திய ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி வரி அதிகரிப்பால், இந்திய புழுங்கல் அரிசியின் விலை சர்வதேச சந்தையில் உயரும் என்பதால், ஏற்றுமதி குறைந்து உள்நாட்டு புழக்கம் அதிகரிக்கும் என அரசு நம்புகிறது.

    இந்திய புழுங்கல் அரிசிக்கு உலகளவில் தேவை அதிகரிப்பு

    முன்னதாக, பாஸ்மதி அல்லாத உடைந்த அரிசி மற்றும் வெள்ளை அரிசி மீதான மத்திய அரசின் ஏற்றுமதித் தடையால் உலகளவில் அரிசி விலை 15-25% வரை உயர்ந்தது. இதனால், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் உள்நாட்டு நுகர்வுத் தேவைகளுக்காக இந்திய புழுங்கல் அரிசிக்கு மாற ஆரம்பித்தனர். இதன் விளைவாக, இந்தியாவின் புழுங்கல் அரிசி ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டில் 2.58 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் தற்போதுவரை தோராயமாக 3.1 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் புழுங்கல் அரிசி ஏற்றுமதியின் அதிகரிப்பு, உள்நாட்டில் சிக்கலை அதிகரிக்கும் என்பதால் வரியை அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மத்திய அரசு
    இந்தியா

    மத்திய அரசு

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை  கோவை
    FAME II திட்டத்தின் கீழ் பெற்ற மானியத்தை திருப்பியளித்த ரிவோல்ட், ஏன்? எலக்ட்ரிக் பைக்
    டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும்  ஜி20 மாநாடு
    எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன? எலக்ட்ரிக் வாகனங்கள்

    இந்தியா

    செப்.2ஆம் தேதி விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஆதித்யா L1  இஸ்ரோ
    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி உலக சாம்பியன்ஷிப்
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு வீரர்களை அனுப்பும் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை

    வணிகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Business Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023