NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / IoT மற்றும் சைபர் பாதுகாப்பு வணிகங்களைப் பிரிக்கும் பிளாக்பெர்ரி, ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    IoT மற்றும் சைபர் பாதுகாப்பு வணிகங்களைப் பிரிக்கும் பிளாக்பெர்ரி, ஏன்?
    IoT மற்றும் சைபர் பாதுகாப்பு வணிகங்களைப் பிரிக்கும் பிளாக்பெர்ரி

    IoT மற்றும் சைபர் பாதுகாப்பு வணிகங்களைப் பிரிக்கும் பிளாக்பெர்ரி, ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 06, 2023
    10:54 am

    செய்தி முன்னோட்டம்

    தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் குறைவாக இருந்த போது, போன் தயாரிப்பில் கோலோச்சிய பெரு நிறுவனங்களுள் ஒன்று பிளாக்பெர்ரி (BlackBerry). கனடாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் 2016ம் ஆண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பிலிருந்து விலகி சைபர் பாதுகாப்பு மென்பொருள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனமாக மாறியது.

    சைபர் பாதுகாப்பு மென்பொருள் மட்டுமின்ற IoT (Internet of Things) தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தியது ப்ளாக்பெர்ரி. மேலும், 2016ம் ஆண்டே பிளாக்பெர்ரி என்ற பிராண்டின் கீழ் புதிய போன்களை உற்பத்தி உரிமையை சீன டெக் நிறுவனமான TCL-க்கு வழங்கியது அந்நிறுவனம்.

    தற்போது தங்களுடைய வணிக நோக்கங்களை முதலீட்டாளர்களுக்கு மேலும் தெளிவுபடுத்தும் பொருட்டு புதிய மாற்றம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறது பிளாக்பெர்ரி.

    பிளாக்பெர்ரி

    புதிய மாற்றத்தைச் சந்திக்கவிருக்கும் பிளாக்பெர்ரி: 

    தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, பிளாக்பெர்ரி நிறுவனமானது தங்களுடைய IoT வணிகத்தையும், சைபர் பாதுகாப்பு சேவை வணிகத்தையும் தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கவிருக்கிறது.

    இரு வணிகளுங்களுக்கும் பிரத்தியேகமான நோக்கம் இருக்கிறது, பிரத்தியேகமான இலக்கு இருக்கிறது. எனவே, இதனை தனித்தனியாகப் பிரிப்பதன் மூலம் மேலும் சிறப்பான செயல்பாடுகளை இரு வணிகங்களிலும் மேற்கொள்ள முடியும் எனக் கருதுகிறது பிளாக்பெர்ரி.

    "இந்த இரு வணிகங்களைப் பிரிப்பது முதலீட்டாளர்களுக்கும் பிளாக்பெர்ரியின் வணிகள் மீதான தெளிவையும் நம்பிக்கையையும் கொடுக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார் பிளாக்பெர்ரி சிஇஐ ஜான் சென்.

    பிளாக்பெர்ரியின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பிளாக்பெர்ரி நிறுவனத்தின் பங்குகள் 4% உயர்வைச் சந்தித்திருக்கின்றன.

    வணிகம்

    மேலும் ஒரு பங்கு அறிமுகம்: 

    தற்போது IoT வணிகத்தை தனியாகப் பிரித்து, அடுத்த நிதியாண்டில் அந்த நிறுவனத்தையும் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டிருக்கிறது பிளாக்பெர்ரி.

    தற்போது பிளாக்பெர்ரியின் பங்குகள் 4% உயர்வைச் சந்தித்தாலும், கடந்த ஆகஸ்ட் மாதம் வெரிடாஸ் கேபிடல் என்ற முதலீட்டு நிறுனம் பிளாக்பெர்ரியை வாங்கத் திட்டமிடுவதாக வெளியா தகவலையடுத்து 18% வரை சரிவைச் சந்தித்திருந்தது.

    கடந்த வாரம் தங்களுடைய இரண்டாம் காலாண்டு முடிவுகளையும் வெளியிட்டிருந்தது பிளாக்பெர்ரி. அதன்படி கடந்த நிதியாண்டை விட தற்போதைய இரண்டாம் காலாண்டில் 36 மில்லியன் டாலர்கள் குறைவாக 132 மில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டியிருக்கிறது பிளாக்பெர்ரி.

    தற்போது தங்களது வணிகங்களை பிரிக்க பிளாக்பெர்ரி எடுத்திருக்கும் முடிவு எப்படியான தாக்கத்தை அந்நிறுவனத்தினி மீது ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    வணிகம்

    கோடக் மஹிந்திரா வங்கி: தனது சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்தார் உதய் கோடக்  இந்தியா
    அரிசி ஏற்றுமதியை தடை செய்திருக்கும் இந்தியா.. உலகளவில் உயரும் அரிசி விலை! இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 4 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 5 தங்கம் வெள்ளி விலை

    தொழில்நுட்பம்

    'பழைய வடிவமைப்பை மீண்டும் கொண்டு வாருங்கள்', ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டம் ஐரோப்பா
    விமானப் பயணங்களின் போது பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை உருவாக்கி வரும் கூகுள் கூகுள்
    இதயத்தின் செயல்பாடைக் கண்காணிக்கும் புதிய உடல்நல பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்திய ஆப்பிள் ஆப்பிள்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    தொழில்நுட்பம்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 21-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    'ஜெனிசிஸ்' துணையுடன், செய்திகள் எழுத தயாராகும் கூகிள் செயற்கை நுண்ணறிவு
    பேச்சுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கருவி டெல்லி
    சாட்டிலைட் மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறது கூகுள் ஆண்ட்ராய்டு

    அமெரிக்கா

    ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரூபர்ட் முர்டோக் ஓய்வு உலகம்
    துருக்கியில் சிகிச்சைப்பெறும் குழந்தை-சென்னைக்கு அழைத்துவர முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி மு.க ஸ்டாலின்
    உலகின் மிகச்சிறிய கேமராவை உருவாக்கி சாதனை படைத்த அமெரிக்க நிறுவனம் தொழில்நுட்பம்
    'கனடாவுக்கு அல்ல, இந்தியாவுக்கு தான் அமெரிக்கா ஆதரவு தரும்': அமெரிக்க அதிகாரி  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025