NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஹெல்த் இன்சூரன்ஸ் பணமில்லா உரிமைகோரல்கள் 3 மணி நேரத்தில் தீர்க்கப்படும்: IRDAI
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹெல்த் இன்சூரன்ஸ் பணமில்லா உரிமைகோரல்கள் 3 மணி நேரத்தில் தீர்க்கப்படும்: IRDAI
    உரிமைகோரல் மறுஆய்வுக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்க முடியாது

    ஹெல்த் இன்சூரன்ஸ் பணமில்லா உரிமைகோரல்கள் 3 மணி நேரத்தில் தீர்க்கப்படும்: IRDAI

    எழுதியவர் Venkatalakshmi V
    May 30, 2024
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) உடல்நலக் காப்பீட்டின் பணமில்லா உரிமைகோரல்களைத் தீர்ப்பதற்கு ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

    முந்தைய 55 கட்டளைகளை மாற்றியமைக்கும் இந்த உத்தரவு, மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற கோரிக்கையைப் பெற்ற மூன்று மணி நேரத்திற்குள் இறுதி அங்கீகாரத்தை வழங்க காப்பீட்டாளர்களை கட்டாயப்படுத்துகிறது.

    இதுகுறித்து IRDAI, "எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பாலிசிதாரர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு காத்திருக்க தேவையில்லை"எனத்தெரிவிக்கிறது.

    பாலிசிதாரர் சிகிச்சையின் போது துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தால், மருத்துவமனைகள் உடனடியாக சடலத்தை விடுவிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை கூறுகிறது.

    கூடுதலாக, உரிமைகோரல் மறுஆய்வுக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்க முடியாது.

    ஒவ்வொரு கோரிக்கை நிராகரிப்பையும் கவனமாக மதிப்பாய்வு செய்து முடிவெடுப்பதற்கு இந்தக் குழு பொறுப்பாகும்.

    உரிமைகோரல்

    IRDAI சரியான நேரத்தில் பணமில்லா உரிமைகோரலை வலியுறுத்துகிறது

    IRDAI ஆனது, காப்பீட்டாளர்கள் முன் வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் 100% ரொக்கமில்லா க்ளைம் செட்டில்மென்ட்டை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

    அவசரகால சூழ்நிலைகளில், பணமில்லா அங்கீகார கோரிக்கைகள் பெறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

    திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, ஜூலை 31, 2024க்குள் தேவையான நடைமுறைகளை நிறுவுமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பாலிசிதாரர்களுக்கு பணமில்லா க்ளெய்ம் செயல்முறைக்கு உதவ, மருத்துவமனைகள் மற்றும் பிற வழிகள் மூலம் பிரத்யேக ஹெல்ப் டெஸ்க்குகளை அமைக்குமாறு காப்பீடு நிறுவனங்களை IRDAI வலியுறுத்தியுள்ளது.

    காப்பீடு நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவை வழங்குநர்களின் பட்டியலைக் காண்பிக்க வேண்டும். அங்கு பாலிசிதாரர்கள் பணமில்லா க்ளெய்ம் செட்டில்மென்ட்டைப் பெறலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காப்பீட்டுத் திட்டங்கள்
    காப்பீட்டுத் திட்டங்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்

    காப்பீட்டுத் திட்டங்கள்

    தீவிர நோய் காப்பீட்டுத் திட்டங்கள்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?  இந்தியா
    வாடகைத் தாய்க்கான காப்பீடும்.. அதில் இருக்கும் சிக்கல்களும்! இந்தியா
    வாகனக் காப்பீட்டை மாற்றுவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! கார்
    நான்கு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலக்குகள் கார்

    காப்பீட்டுத் திட்டங்கள்

    காலாவதியாகிய காப்பீட்டுத் திட்டங்களை புதுப்பிக்க எல்ஐசியின் திட்டம் காப்பீட்டுத் திட்டங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025