NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / மின்சாதன இறக்குமதிக்கு இந்தியா தடை, ஆட்சேபனை தெரிவிக்கும் அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    மின்சாதன இறக்குமதிக்கு இந்தியா தடை, ஆட்சேபனை தெரிவிக்கும் அமெரிக்கா

    மின்சாதன இறக்குமதிக்கு இந்தியா தடை, ஆட்சேபனை தெரிவிக்கும் அமெரிக்கா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 24, 2023
    04:27 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கணினி (Compputer), மடிக்கணினி (Laptop) மற்றும் கைக்கணினி (Tablet) உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு உரிமம் பெற வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது மத்திய அரசு.

    இந்தியாவில் உள்நாட்டு லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களின் தயாரிப்பை ஊக்குவிக்கவும், சீனாவுடனான வர்த்தக சமமின்மையை சரிக்கட்டவுமே இந்த முடிவை எடுத்தது இந்திய அரசு.

    ஆனால், மின்சாதன தயாரிப்புத் துறையிடமிருந்து எதிர்ப்பு எழவே, அத்திட்டத்தை மூன்று மாத காலம் வரை தள்ளி வைத்தது இந்தியா. தற்போது அந்தத் திட்டத்தை மேலும் ஓராண்டு காலம் வரை மத்திய அரசு தள்ளி வைக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    வணிகம்

    ஆட்சேபனை தெரிவிக்கும் அமெரிக்கா: 

    உரிமம் பெறும் நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவிற்கு மேற்கூறிய மின்னணு சாதனங்களை இறங்குமதி செய்ய முடியும் என்ற மத்திய அரசின் புதிய விதிமுறையானது அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள், டெல் மற்றும் எச்பி உள்ளிட்ட பல்வேறு மடிக்கணினி மற்றும் கணினி தயாரிப்பாளர்களைப் பாதிக்கும்.

    மத்திய அரசின் புதிய விதிமுறையானது இந்தியாவில் இயங்கி வரும் மேற்கூறிய அமெரிக்க நிறுவனங்களை எந்தளவு பாதிக்கும் என்பது குறித்து, கடந்த மாதம் இந்தியா வந்திருந்த அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரீன் தாய் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

    எனவே, தற்போது உரிமம் பெற வேண்டும் என்ற திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு, மின்சாதனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அது குறித்த தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எளிய செயல்பாடு நடைமுறைப்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    இந்தியா
    அமெரிக்கா

    சமீபத்திய

    இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் சந்திரன்
    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
    ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை

    வணிகம்

    பேடிஎம் மற்றும் போன்பேவுடன் போட்டியிட சவுண்டு பாக்ஸை அறிமுகப்படுத்துகிறதா ஜியோ? ஜியோ
    FAME II திட்டத்தின் கீழ் பெற்ற மானியத்தை திருப்பியளித்த ரிவோல்ட், ஏன்? எலக்ட்ரிக் பைக்
    வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ் செயற்கை நுண்ணறிவு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 29 தங்கம் வெள்ளி விலை

    இந்தியா

    பயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர்  ஐநா சபை
    கனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும்: மிரட்டல் விடுக்கும் SFJ  கனடா
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்றுள்ள 5 வினோத விளையாட்டுகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை

    அமெரிக்கா

    "மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும்": அதிபர் தேர்தல் விவாதங்களைத் தவிர்க்கும் டிரம்ப் டொனால்ட் டிரம்ப்
    2024 அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்தியாவுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்த மிகப்பெரும் எச்சரிக்கை  இந்தியா
    புயல் ஹிலாரி பாதிப்புக்கு மத்தியில் கலிபோர்னியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உலகம்
    காவல்துறையில் சரணடைய உள்ளார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  டொனால்ட் டிரம்ப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025