இஸ்ரேல் -பாலஸ்தீனப் போர் எதிரொலி: தங்கம் விலை ரூ.680 உயர்வு
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று தொடங்கிய இஸ்ரேல் -பாலஸ்தீனப் போரால் கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,370-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.42,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.83 உயர்ந்து ரூ.5,858-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.42,960-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.74.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.