Loading...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $100 வரை உயர்வு: பின்னணியும் காரணங்களும்
கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $100 வரை உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $100 வரை உயர்வு: பின்னணியும் காரணங்களும்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2026
03:55 pm

செய்தி முன்னோட்டம்

சவூதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $100-ஐ நெருங்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் எந்தவொரு தனி அமைப்பும் கச்சா எண்ணெய் விலையை தினமும் நிர்ணயம் செய்வதில்லை. சர்வதேச சந்தையில் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான தேவை மற்றும் விநியோகம் அடிப்படையிலேயே விலை மாறுகிறது. உலக சந்தை வர்த்தகத்திற்கு பிரெண்ட் முதன்மை அளவுகோலாகப் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் சந்தைக்கு 'டபிள்யூ.டி.ஐ' (WTI) முக்கிய அளவுகோலாக உள்ளது.

ஓபெக்

OPEC அமைப்பின் அதிகாரம் மற்றும் வரம்புகள்

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான 'OPEC', உற்பத்தி இலக்குகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சந்தையில் எண்ணெயின் அளவை அதிகரித்து அல்லது குறைத்து விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இருப்பினும், 2024 தரவுகளின்படி ஓபெக் அல்லாத அமெரிக்கா, கனடா, பிரேசில், நார்வே போன்ற நாடுகள் உலக உற்பத்தியில் 65% பங்களிப்பதால், ஓபெக் அமைப்பால் மட்டுமே விலையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது.

மேலும், தனது உற்பத்தி வரம்புகளை தாண்டி வர்த்தகத்தை பெருக்க ஐக்கிய அரபு அமீரகம் மே 1 அன்று ஓபெக் அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

விலை உயர்வு

போர்ச் சூழலும் திடீர் விலை உயர்வும்

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணை வழியிலான வர்த்தகத் தடைகள், எதிர்கால எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும் என்ற உலக வர்த்தகர்களின் அச்சமே தற்போதைய திடீர் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணமாகும்.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, எண்ணெய் கையிருப்பு மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் ஆகியவை ஒருங்கிணைந்தே கச்சா எண்ணெய் விலையின் போக்கை நிர்ணயிக்கின்றன.

ADVERTISEMENT