
டிரம்ப் வரி விதிப்பு அறிவிப்பால் கிரிப்டோகரன்சிகள் கடும் வீழ்ச்சி; பிட்காயின் $76,790 ஆக சரிவு
செய்தி முன்னோட்டம்
திங்கட்கிழமை (ஏப்ரல் 7) அன்று உலகளாவிய கிரிப்டோகரன்சி சந்தை குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி உயர்வை அறிவித்துள்ள நிலையில், முதலீட்டாளர்களிடையே பீதி ஏற்பட்டு, முக்கிய டிஜிட்டல் கரன்சிகளில் கூர்மையான சரிவு ஏற்பட்டது.
உலகின் மிகவும் மதிப்புமிக்க கிரிப்டோகரன்சியான பிட்காயின், உலகளாவிய பரிமாற்றங்களில் 8% க்கும் மேலாக சரிந்து $76,790 (தோராயமாக ரூ.65.7 லட்சம்) ஆக இருந்தது. இது இந்த ஆண்டு அதன் மிகக் குறைந்த அளவைக் குறிக்கிறது.
இந்திய தளங்களில், பிட்காயின் 7% அளவிற்கு சரிந்து ரூ.69.2 லட்சமாக இருந்தது. புதிய அமெரிக்க வர்த்தக கட்டணங்களால் ஏற்பட்டுள்ள சந்தை நிச்சயமற்ற தன்மை நிதித்துறையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச் சந்தைகள்
பங்குச் சந்தைகள் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் வீழ்ச்சி
வரி விதிப்பு பங்குகள் மற்றும் டிஜிட்டல் கரன்சிகள் என இரண்டையும் பாதித்துள்ளது. சரிவு கரடி சந்தையின் தொடக்கத்தைக் குறிக்கலாம் என்று CoinDCX ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
ஆனால் முதலீட்டாளர்கள் பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தினார். பில்லியனர் மார்க் கியூபன் இதே கருத்தை தெரிவித்து, பீதியடைந்து எதையும் விற்க வேண்டாம் என ஆலோசனை வழங்கினார்.
சந்தைகள் பொதுவாக சரியான நேரத்தில் மீண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். பிட்காயினைத் தவிர ஈத்ரியம் இன்னும் மோசமாக, உலகளவில் கிட்டத்தட்ட 15% சரிந்து $1,543 (தோராயமாக ரூ.1.32 லட்சம்) ஆக உள்ளது.
சந்தை அளவிலான விற்பனையில் ரிப்பிள், சோலானா, கார்டானோ, டோகாயின் மற்றும் பைனான்ஸ் காயின் போன்ற ஆல்ட்காயின்களும் சரிவை சந்தித்துள்ளன.
இழப்பு
கிரிப்டோகரன்சிகளின் ஒட்டுமொத்த இழப்பு
CoinMarketCap படி, ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தை மூலதனம் 8.1% குறைந்து $2.45 டிரில்லியன் ஆக இருந்தது. பரவலான இழப்புகள் இருந்தபோதிலும், டெதர் மற்றும் பைனான்ஸ் யுஎஸ்டி போன்ற ஸ்டேபிள்காயின்கள் ஒப்பீட்டளவில் பாதிக்கப்படாமல் இருந்தன.
இவை சிறிய அளவில் லாபங்களை வழங்கியுள்ளன. அமெரிக்க கூட்டாட்சி நிறுவனங்கள் திங்கட்கிழமை பிற்பகுதியில் தங்கள் கிரிப்டோ ஹோல்டிங்ஸை வெளிப்படுத்தியவுடன் கிரிப்டோ கரன்சிகளின் நிலை குறித்து ஒரு தெளிவு கிடைக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
அப்போது விலை கிரிப்டோகரன்சிகளின் விலை மீண்டும் உயரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பயம் மற்றும் பேராசை காரணமாக விற்பதும் நீடிப்பதால், ஆய்வாளர்கள் குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கம் நீடிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர்.