பட்ஜெட் 2025: மிடில் கிளாஸ் மக்களுக்கு குட்நியூஸ்; ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது
செய்தி முன்னோட்டம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட் உரையின் போது அரசாங்கம் புதிய வருமான வரி மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் என்று அறிவித்தார்.
மேலும், நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் நிவாரணமாக, 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வரி விதிப்பின் கீழ் ₹12.75 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்று அறிவித்தார்.
வருமான வரி விலக்கு வரம்பு ₹7 லட்சத்தில் இருந்து ₹12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு கூடுதலாக ₹75,000 நிலையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வரி அடுக்குகள் செலவழிப்பு வருமானத்தை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் நுகர்வு மற்றும் சேமிப்பை அதிகரிக்கும்.
ட்விட்டர் அஞ்சல்
வருமான வரிவிலக்கு வரம்பு உயர்வு
Zero Income Tax till ₹12 Lakh Income under New Tax Regime
— Ministry of Finance (@FinMinIndia) February 1, 2025
👉 Slabs and rates being changed across the board to benefit all tax-payers
👉 New structure to substantially reduce taxes of middle class and leave more money in their hands, boosting household consumption, savings and… pic.twitter.com/KfQy4a6PGd
பழைய வரி முறை
பழைய வரி முறையில் மாற்றங்கள்
புதிய வரி கட்டமைப்பைப் போல, பட்ஜெட் 2025இல் பழைய வருமான வரி கட்டமைப்பை பின்பற்றுபவர்களுக்கு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அது பின்வருமாறு:-
0-4 லட்சம்: இல்லை
₹4-8 லட்சம்: 5%
₹8-12 லட்சம்: 10%
₹12-16 லட்சம்: 15%
₹16-20 லட்சம்: 20%
₹20-24 லட்சம்: 25%
₹24 லட்சத்திற்கு மேல்: 30%
குடும்ப சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாக இந்த நடவடிக்கையை வரி நிபுணர்கள் கருதுகின்றனர்.