NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த முதலீடுகளை வியட்நாமிற்குத் திருப்பிய சீன நிறுவனமான லக்ஸ்ஷேர், ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த முதலீடுகளை வியட்நாமிற்குத் திருப்பிய சீன நிறுவனமான லக்ஸ்ஷேர், ஏன்?
    இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த முதலீடுகளை வியட்நாமிற்குத் திருப்பிய சீன நிறுவனமான லக்ஸ்ஷேர்

    இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த முதலீடுகளை வியட்நாமிற்குத் திருப்பிய சீன நிறுவனமான லக்ஸ்ஷேர், ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 17, 2023
    04:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வருவது, இந்தியாவில் செயல்பட்டு வரும் சீன நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகம் செய்வதற்கும், வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் தடையாக இருந்து வருகிறது.

    சீன ஆட்டோமொபைல் நிறுவனமான SAIC-ன் கீழ் இருக்கும் எம்ஜி, மற்றும் நேரடியாக சீனாவைச் சேர்ந்த BYD உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை விஸ்தரிக்க இந்திய அரசு அனுமதிக்கவில்லை.

    சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி பெறுவது குதிரைக் கொம்பாகி வருகிறது.

    மேற்கூறிய நிறுவனங்களைத் தொடர்ந்து சீனாவைச் சேர்ந்த லக்ஸ்ஷேர் (Luxshare) என்ற நிறுவனத்திற்கும் இந்தியாவில் வர்த்தகத்தை விஸ்தரிக்க தடங்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த முதலீடுகளை வியட்நாமிற்கு திருப்பியிருக்கிறது அந்நிறுவனம்.

    வணிகம்

    இந்தியாவில் லக்ஸ்ஷேர் நிறுவனத்திற்குத் தடங்கல்: 

    சீனாவைச் சேர்ந்த வாங் லைச்சுன் என்பவர் 2019ம் ஆண்டு இந்தியாவில் லக்ஸ்ஷேர் நிறுவனத்தைத் தொடங்கினார்.

    2020ம் ஆண்டு தமிழகத்தில் செயலபடாமல் இருந்த மோட்டோரோலா தொழிற்சாலை ஒன்றை ரூ.750 கோடி முதலீட்டில் வாங்கத் திட்டமிட்டது லக்ஸ்ஷேர். ஆனால், இந்தியா-சீனா பிரச்சினை காராணமாக மேற்கொண்டு சீன நிறுவனங்களின் முதலீடுகளை இந்தியா ஆதரிக்கவில்லை.

    மேலும், அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுக்கான இந்தியா விசாவானது பலமுறை நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

    எம்ஜி நிறுவனத்தைப் போல இந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் கூட்டு முயற்சியாக வர்த்தகம் செய்யும் நிபந்தனையின் பேரில் முதற்கட்ட அனுமதிகளை லக்ஸ்ஷேருக்கு வழங்கியது இந்திய அரசு. ஆனால், நிச்சயமில்லாத நிலையில் தங்களால் இந்தியாவில் முதலீடு செய்ய முடியாது எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    சீனா

    வியட்நாமில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு: 

    வியட்நாமில் ஏற்கனவே இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ.1,500 கோடிகளை முதலீடு செய்திருக்கிறது லக்ஸ்ஷேர். இந்தியாவில் தொடர்ந்து தங்கள் முதலீடுகளுக்கு தடை ஏற்பட்டு வந்ததையடுத்து, இந்தியாவில் அந்நிறுவனம் மேற்கொள்ளவிருந்த ரூ.2,750 கோடி மதிப்பிலான முதலீடுகளை தற்போது வியட்நாமிற்கு திருப்பியிருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து வியட்நாமில் லக்ஸ்ஷேரின் முதலீடு இந்திய மதிப்பில் ரூ.4,200 கோடியாக அதிகரித்திருக்கிறது. லக்ஸ்ஷேர் நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் சமீபத்திலேயே அந்நாட்டு அரசு அந்நிறுவனத்திற்கு அளித்திருக்கிறது.

    வியட்நாமில் அமையவிருக்கும் 72 ஏக்கர் பரப்பளவிலான புதிய தொழிற்சாலையில் ஸ்மார்ட்போன் கேபிள்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைத் தயாரிக்கவிருக்கிறது லக்ஸ்ஷேர். இந்நிறுவனம் ஆப்பிளின் மின்னணு சாதன விநியோக நிறுவனங்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    ஆப்பிள்
    இந்தியா
    சீனா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 18 தங்கம் வெள்ளி விலை
    புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் ஆகாசா ஏர் விமான சேவை நிறுவனம் விமான சேவைகள்
    ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது டிசிஎஸ் நிறுவனம் டிசிஎஸ்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 19 தங்கம் வெள்ளி விலை

    ஆப்பிள்

    வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 ஸ்மார்ட்வாட்ச்களை வெளியிட்டது ஆப்பிள் ஆப்பிள் தயாரிப்புகள்
    வெளியானது ஆப்பிளின் புதிய ஃப்ளாக்ஷிப் 'ஐபோன் 15 சீரிஸ்'  ஐபோன்
    செப். 18ல் வெளியாகும் ஆப்பிள் சாதன இயங்குதளங்கள் மற்றும் ஆப்பிளின் பிற அப்டேட்கள் ஆப்பிள் தயாரிப்புகள்
    கூடுதலான கதிர்வீச்சை வெளியிடும் ஐபோன் 12, விற்பனையை நிறுத்த உத்தரவிட்ட பிரான்ஸ் ஐபோன்

    இந்தியா

    இந்தியா vs நெதர்லாந்து உலகக்கோப்பையின் கடைசி லீக் போட்டி - டாஸை வென்றது இந்தியா  உலக கோப்பை
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    'எப்போதும் சட்டத்தின் பக்கம் நிற்பேன்': மீண்டும் இந்தியா மீது குற்றம்சாட்டினார் கனேடிய பிரதமர் ட்ரூடோ  கனடா
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - அதிக சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்த ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா

    சீனா

    கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா? இந்தியா
    எலெக்ட்ரிக் கார் தயாரிப்புத் துறையில் களமிறங்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி சியோமி
    இலங்கை- சீனா 4.2 பில்லியன் டாலர் கடனை மறுவரையறை செய்ய ஒப்புதல் இலங்கை
    சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரி மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி  இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025