NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / மீண்டும் வேதாந்தா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் அஜய் கோயல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் வேதாந்தா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் அஜய் கோயல்
    மீண்டும் வேதாந்தா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட அஜய் கோயல்

    மீண்டும் வேதாந்தா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் அஜய் கோயல்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 24, 2023
    12:26 pm

    செய்தி முன்னோட்டம்

    வேதாந்தா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகிய அஜய் கோயல், மீண்டும் வேதாந்த குழுமத்தில் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    வேதாந்தா நிறுவனமானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆறு தனித் தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது. இதற்கு உதவும் விதமாக அஜய் கோயல் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.

    வேதாந்தா நிறுவனத்திலிருந்து விலகிய அஜய் கோயல், அதன் பின்பு இந்தியாவின் முன்னணி கற்றல் சேவை வழங்கும் நிறுவனமாக இருந்த பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார். ஆறு மாதங்களுக்குப் பின்பு தற்போது மீண்டும் வேதாந்தாவில் இணைந்திருக்கிறார் அவர்.

    வணிகம்

    ஒப்புதல் அளித்த இயக்குநர் குழு: 

    வேதாந்தா குழுமத்தில் அஜய் கோயலுக்குப் பின்பு தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட சோனால் ஸ்ரீவத்ஸவா அந்நிறுவனத்திலிருந்து கடந்த மாதம் விலகுவதாகத் தெரிவித்ததையடுத்து, அஜய் கோயல் மீண்டும் தலைமை நிதி அதிகாரியாக இணைந்திருக்கிறார்.

    அஜய் கோயல் மீண்டும் நியமிக்கப்படுவதற்கு வேதாந்தா குழுமத்தின் இயக்குநர் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. வரும் அக்டோபர் 30ம் தேதி முதல் மீண்டும் பதிவியேற்கவிருக்கிறார் அஜய் கோயல்.

    கடந்த நிதியாண்டிற்கான நிதி அறிக்கையையே பைஜூஸ் நிறுவனம் இன்னும் தாக்கல் செய்யாத நிலையில், அஜய் கோயலின் ராஜினாமா அந்நிறுவனத்திற்கு மற்றொரு பெரிய இழப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விரைவில் இரு நிறுவனங்களும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேதாந்தா
    வணிகம்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    வேதாந்தா

    தனது வெற்றிக்கான காரணத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் வணிகம்

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 23 தங்கம் வெள்ளி விலை
    மின்சாதன இறக்குமதிக்கு இந்தியா தடை, ஆட்சேபனை தெரிவிக்கும் அமெரிக்கா இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 25 தங்கம் வெள்ளி விலை
    சென்னையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகள்-காரணம் என்ன? சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025