NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா
    வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா

    வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 06, 2023
    03:50 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்து வரும் அபாட் இந்தியா (Abbott India) நிறுவனம், தங்களுடைய ஆண்டாசிடு டைஜீன் சிரப்பை மருந்தின் குறிப்பிட்ட பேட்ச் தயாரிப்புகளை மட்டும் திரும்பப் பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

    குறிப்பிட்ட மருந்தின் சுவை மற்றும் வாசனை மாறுபட்டு மோசமாக இருப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் வந்ததையடுத்து இந்த முடிவை எடுத்திருக்கிறது மும்பைச் சேர்ந்த அபாட் இந்திய.

    'வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து மேற்கூறிய வகையில் புகாரைப் பெற்றதையடுத்து, தங்களிடம் மேற்கூறிய மருந்தின் குறிப்பிட்ட பேட்ச்களை தன்னார்வ முறையில் திரும்பப் பெறவிருப்பதாக அபாட் இந்தியா தெரிவித்ததாக', மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    மருந்து

    அஜீரண மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா: 

    அபாட் இந்தியாவின் கோவா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மின்ட், ஆரஞ்சு மற்றும் பிற பழச் சுவைகளைக் கொண்ட டைஜீன் ஜெல் மருந்தின் அனைத்து பேட்ச்களையும் தன்னார்வ முறையில் திரும்பப் பெறவிருக்கிறது அந்நிறுவனம்.

    வாடிக்கையாளர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதை தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடமும் உறுதி செய்திருக்கிறது அபாட் இந்தியா.

    அபாட் இந்தியா திரும்பப் பெறும் இந்த டைஜீன் மருந்தை உட்கொண்டதனால் எந்த விதமான உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட்டதாக இதுவரை எந்தப் புகாரும் எழவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தங்களது பிற தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் டைஜீன் மருந்துகளில் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றும், தொடர்ந்து உற்பத்தி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறது அபாட் இந்தியா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    வணிகம்

    இந்தியாவில் ஐபோன் 15 உற்பத்தியைத் துவக்கிய ஃபாக்ஸ்கான் ஆப்பிள்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 17 தங்கம் வெள்ளி விலை
    பாட்டா இந்தியா நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கவிருக்கும் அடிடாஸ், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் பேச்சுவார்த்தை இந்தியா
    இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்: பிரிட்டன் கார்களுக்கு வரிச்சலுகை அளிக்கிறதா இந்தியா? இந்தியா

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 2 தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை திடீரென்று நிறுத்தியது கனடா  கனடா
    "இந்தியாவின் அறிவியல் முயற்சிகள் தொடரும்": பிரதமர் மோடி இஸ்ரோ
    சந்திரயான் 3இன் அடுத்த சாதனை: நிலவில் சதம் அடித்தது பிரக்யான் ரோவர்  இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025