NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா
    வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா
    1/2
    வணிகம் 1 நிமிட வாசிப்பு

    வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா

    எழுதியவர் Prasanna Venkatesh
    September 06, 2023 | 03:50 pm
    September 06, 2023 | 03:50 pm
    வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா
    வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா

    இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்து வரும் அபாட் இந்தியா (Abbott India) நிறுவனம், தங்களுடைய ஆண்டாசிடு டைஜீன் சிரப்பை மருந்தின் குறிப்பிட்ட பேட்ச் தயாரிப்புகளை மட்டும் திரும்பப் பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறது. குறிப்பிட்ட மருந்தின் சுவை மற்றும் வாசனை மாறுபட்டு மோசமாக இருப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் வந்ததையடுத்து இந்த முடிவை எடுத்திருக்கிறது மும்பைச் சேர்ந்த அபாட் இந்திய. 'வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து மேற்கூறிய வகையில் புகாரைப் பெற்றதையடுத்து, தங்களிடம் மேற்கூறிய மருந்தின் குறிப்பிட்ட பேட்ச்களை தன்னார்வ முறையில் திரும்பப் பெறவிருப்பதாக அபாட் இந்தியா தெரிவித்ததாக', மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    2/2

    அஜீரண மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா: 

    அபாட் இந்தியாவின் கோவா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மின்ட், ஆரஞ்சு மற்றும் பிற பழச் சுவைகளைக் கொண்ட டைஜீன் ஜெல் மருந்தின் அனைத்து பேட்ச்களையும் தன்னார்வ முறையில் திரும்பப் பெறவிருக்கிறது அந்நிறுவனம். வாடிக்கையாளர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதை தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடமும் உறுதி செய்திருக்கிறது அபாட் இந்தியா. அபாட் இந்தியா திரும்பப் பெறும் இந்த டைஜீன் மருந்தை உட்கொண்டதனால் எந்த விதமான உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட்டதாக இதுவரை எந்தப் புகாரும் எழவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களது பிற தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் டைஜீன் மருந்துகளில் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றும், தொடர்ந்து உற்பத்தி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறது அபாட் இந்தியா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    வணிகம்
    இந்தியா

    வணிகம்

    நுகர்வோர் ஒருவருக்கு ITC நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு, ஏன்? இந்தியா
    மெட்டாவின் மிக முக்கியமான சந்தைகளுள் ஒன்று இந்தியா இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 6 தங்கம் வெள்ளி விலை
    7வது ஆண்டு விழாக் கொண்டாட்டம், ரீசார்ஜ் திட்டங்களில் சலுகைகளை வழங்கும் ஜியோ  ஜியோ

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    இந்தியாவா? பாரதமா? 2016ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது? உச்ச நீதிமன்றம்
    'சூப்பர் 4'க்கு முன்னேறியிருக்கும் ஆசிய கோப்பைத் தொடர், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? ஆசிய கோப்பை
    பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு குழுவின் இயக்குநர் அருண்குமார் சின்ஹா ​​காலமானார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை

    வணிகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Business Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023